திருவரங்குளத்தில் அரசு பஸ்கள் மோதல்; 5 பேர் காயம்




திருவரங்குளம் அருகே கேப்பறை முகம் மூன்று சந்திப்பில் புதுக்கோட்டையில் இருந்து அறந்தாங்கி நோக்கி சென்ற அரசு பஸ்சும், ஆலங்குடியில் இருந்து புதுக்கோட்டை நோக்கி சென்ற அரசு நகர பஸ்சும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதியது. இதில் பஸ்களில் பயணம் செய்த 5-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வல்லத்திராக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments