நாடாளுமன்ற தேர்தல் பாதுகாப்பு பணிக்காக துணை ராணுவ படை நாளை (திங்கட்கிழமை) புதுக்கோட்டைக்கு வருகை தர உள்ளது.
நாடாளுமன்ற தொகுதிகள்
புதக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை, கந்தர்வகோட்டை (தனி) சட்டமன்ற தொகுதிகள் திருச்சி நாடாளுமன்ற தொகுதியிலும், திருமயம், ஆலங்குடி சட்டமன்ற தொகுதி சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியிலும், அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியிலும், விராலிமலை சட்டமன்ற தொகுதி கரூர் நாடாளுமன்ற தொகுதியிலும் அடங்கியுள்ளது.
மாவட்டத்தில் நாலாபுறமும் நாடாளுமன்ற தேர்தல் பிரசாரம் களைகட்ட தொடங்கி உள்ளது. மாவட்டத்தில் தேர்தல் விதிகளை மீறலை தடுக்க தேர்தல் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் எல்லைப்பகுதிகளில் உள்ள 8 சோதனைச்சாவடிகள் மற்றும் மாவட்டத்திற்குள் தேர்தலையொட்டி வாகன சோதனைக்காக அமைக்கப்பட்ட 11 சோதனைச்சாவடிகளிலும் தீவிர வாகன சோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது.
துணை ராணுவ படை
இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தலில் வாக்குப்பதிவின் போது வாக்குச்சாவடி மையங்கள் உள்பட தேர்தல் பாதுகாப்பு பணிக்காக போலீசார் ஈடுபடுவது தொடர்பாக பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே நாடாளுமன்ற தேர்தல் பாதுகாப்பு பணிக்காக மத்திய துணை ராணுவ படையினர் 3 கம்பெனிகள் நாளை (திங்கட்கிழமை) புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வருகை தர உள்ளனர்.
அவர்கள் பறக்கும்படையினருடன் வாகன சோதனை, பதற்றமான வாக்குச்சாவடிகள் உள்ள பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.