மாநகராட்சியுடன் ஊராட்சிகள் இணைப்புக்கு எதிர்ப்பு: நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க போவதாக பதாகை, சுவரொட்டி ஒட்டியதால் பரபரப்பு




புதுக்கோட்டை நகராட்சி மாநகராட்சியாக சமீபத்தில் தரம் உயர்த்தப்பட்டது. இதில் நகராட்சியையொட்டியுள்ள சில ஊராட்சிகள் இணைக்கப்பட்டன. இந்த நிலையில் ஊராட்சிகள் இணைக்கப்பட்டதற்கு அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். திருக்கட்டளை, திருமலைராயசமுத்திரம் ஊராட்சிகளை சேர்ந்தவா்கள் தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்கப்போவதாக பதாகைகளை அவ்வூர்களில் வைத்துள்ளனர். இதேபோல் முள்ளூர் பகுதியிலும் எதிர்ப்பு தெரிவித்து தேர்தலை புறக்கணிப்பதாக சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர். தேர்தலை புறக்கணிக்கப்போவதாக பதாகை வைக்கப்பட்டது, சுவரொட்டி ஒட்டப்பட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments