ரயில் நிலையங்களில் யு.பி.ஐ. மூலம் டிக்கெட் எடுக்கும் வசதி இந்திய ரெயில்வே அறிமுகம் செய்தது




இந்தியாவில் உள்ள அனைத்து ரெயில் நிலையங்களிலும் யு.பி.ஐ. மூலம் டிக்கெட் எடுக்கும் வசதியை இந்திய ரெயில்வே அறிமுகம் செய்துள்ளது.

டிஜிட்டல் முறை

இந்தியாவில் டிஜிட்டல் பண பரிவர்த்தனை என்பது அதிகமாகிவிட்டது. அந்தவகையில், சிறிய கடை முதல் பெரிய வணிக நிறுவனங்கள் வரை யு.பி.ஐ. மூலம் டிஜிட்டல் பண பரிவர்த்தனை செய்யும் வசதியை வைத்திருக்கிறார்கள். டிஜிட்டல் முறையில் பணப்பரிவர்த்தனை செய்வது இன்று பெரும்பாலான இடங்களில் அறிமுகமாகிவிட்டாலும், ஒரு சில இடங்களில் இதற்கான வாய்ப்புகள் இல்லாமல் இருக்கிறது.குறிப்பாக, பஸ் மற்றும் ரெயிலுக்கான டிக்கெட் எடுப்பது நேரடியாக பணம் செலுத்தி எடுக்கும் நிலை இருந்து வந்தது. ரெயில்களில் முன்பதிவு டிக்கெட்டுகளை ஆன்லைன் பணப்பரிவர்த்தனை மூலம் பெறும் வழக்கம் நடைமுறையில் இருந்து வருகிறது. இதேபோல, முன்பதிவு இல்லாத பெட்டிகளுக்கும் டிக்கெட் பெற டிஜிட்டல் பண பரிவர்த்தனை முறையை கொண்டுவர வேண்டுமென ரெயில்வே நிர்வாகத்திற்கு ரெயில் பயணிகள் கோரிக்கை அளித்து வந்தனர்.

நாடு ழுழுவதும்...

இந்த நிலையில், இந்திய ரெயில்வே நிர்வாகம் இந்தியாவில் உள்ள ரெயில் நிலையங்களில் யு.பி.ஐ. டிஜிட்டல் பண பரிவர்த்தனை செய்வதற்கான வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது. மத்திய அரசு தற்போது அனைத்து பகுதிகளிலும் டிஜிட்டல் முறையிலான பண பரிவர்த்தனைகளை அதிகப்படுத்துவதற்கான முயற்சியில் இறங்கியுள்ளது. அதன் ஒரு படியாக இனி முன்பதிவு இல்லாத ரெயில் டிக்கெட்டுகளையும் டிஜிட்டல் முறையிலான பண பரிவர்த்தனையில் வாங்கிக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த டிஜிட்டல் பண பரிவர்த்தனை நேற்று (ஏப்ரல் 1-ந்தேதி) முதல் நாடு முழுவதும் உள்ள ரெயில் நிலையங்களில் அமலுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments