இந்தியாவில் உள்ள அனைத்து ரெயில் நிலையங்களிலும் யு.பி.ஐ. மூலம் டிக்கெட் எடுக்கும் வசதியை இந்திய ரெயில்வே அறிமுகம் செய்துள்ளது.
டிஜிட்டல் முறை
இந்தியாவில் டிஜிட்டல் பண பரிவர்த்தனை என்பது அதிகமாகிவிட்டது. அந்தவகையில், சிறிய கடை முதல் பெரிய வணிக நிறுவனங்கள் வரை யு.பி.ஐ. மூலம் டிஜிட்டல் பண பரிவர்த்தனை செய்யும் வசதியை வைத்திருக்கிறார்கள். டிஜிட்டல் முறையில் பணப்பரிவர்த்தனை செய்வது இன்று பெரும்பாலான இடங்களில் அறிமுகமாகிவிட்டாலும், ஒரு சில இடங்களில் இதற்கான வாய்ப்புகள் இல்லாமல் இருக்கிறது.குறிப்பாக, பஸ் மற்றும் ரெயிலுக்கான டிக்கெட் எடுப்பது நேரடியாக பணம் செலுத்தி எடுக்கும் நிலை இருந்து வந்தது. ரெயில்களில் முன்பதிவு டிக்கெட்டுகளை ஆன்லைன் பணப்பரிவர்த்தனை மூலம் பெறும் வழக்கம் நடைமுறையில் இருந்து வருகிறது. இதேபோல, முன்பதிவு இல்லாத பெட்டிகளுக்கும் டிக்கெட் பெற டிஜிட்டல் பண பரிவர்த்தனை முறையை கொண்டுவர வேண்டுமென ரெயில்வே நிர்வாகத்திற்கு ரெயில் பயணிகள் கோரிக்கை அளித்து வந்தனர்.
நாடு ழுழுவதும்...
இந்த நிலையில், இந்திய ரெயில்வே நிர்வாகம் இந்தியாவில் உள்ள ரெயில் நிலையங்களில் யு.பி.ஐ. டிஜிட்டல் பண பரிவர்த்தனை செய்வதற்கான வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது. மத்திய அரசு தற்போது அனைத்து பகுதிகளிலும் டிஜிட்டல் முறையிலான பண பரிவர்த்தனைகளை அதிகப்படுத்துவதற்கான முயற்சியில் இறங்கியுள்ளது. அதன் ஒரு படியாக இனி முன்பதிவு இல்லாத ரெயில் டிக்கெட்டுகளையும் டிஜிட்டல் முறையிலான பண பரிவர்த்தனையில் வாங்கிக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த டிஜிட்டல் பண பரிவர்த்தனை நேற்று (ஏப்ரல் 1-ந்தேதி) முதல் நாடு முழுவதும் உள்ள ரெயில் நிலையங்களில் அமலுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.