புதுக்கோட்டை அருகே தேர்தலை புறக்கணிப்பதாக கிராம மக்கள் பதாகை வைப்பு கருப்புக்கொடி காட்டி ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்




புதுக்கோட்டை அருகே இலுப்பூர் தாலுகா பெருமாநாடு வட்டம் கோதண்டராமபுரம் ஊராட்சி சேந்தமங்கலம் கிராம மக்கள் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க போவதாக ஊரில் பதாகை வைத்துள்ளனர். அதில் தங்களது விவசாய நிலங்களை கணினியில் பதிவேற்றம் செய்ய வருவாய்த்துறையினர் மறுத்து வருவதாகவும், அதனால் நாடாளுமன்ற தேர்தலில் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களிக்க மாட்டோம் என கூறப்பட்டுள்ளது. மேலும் கருப்பு கொடி காட்டி தங்களது எதிா்ப்பை தெரிவித்து நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தேர்தலை புறக்கணிப்பதாக கிராம மக்கள் அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments