கார் கவிழ்ந்தது
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் காரில் வேளாங்கண்ணிக்கு சென்று விட்டு கிழக்கு கடற்கரை சாலை வழியாக ஊருக்கு திரும்பி சென்று கொண்டிருந்தனர். இவர்கள் சென்ற கார் ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி.பட்டினம் அடுத்த கலிய நகரி கிராமத்தின் அருகே நேற்று காலை சென்று கொண்டிருந்தது. அப்போது ஆடு, மாடுகள் திடீரென சாலையின் குறுக்கே வந்தன. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த காரை ஓட்டி சென்ற ஜான் என்பவர் உடனடியாக பிரேக் பிடித்துள்ளார். இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி சாலையோரம் இருந்த முட்புதரில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் இருந்தவர்கள் இடிபாடுகளில் சிக்கி கூச்சலிட்டனர்.
5 பேர் படுகாயம்
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து காரின் இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்டனர். இதில் பாளையங்கோட்டையை சேர்ந்த லில்லி புஷ்பம்(வயது 62), ரீட்டா மேரி(34), புஷ்பம்(42), முருகப்பெருமாள்(37), ஸ்ருதிகா(10) ஆகிய 5 பேர் படுகாயம் அடைந்தனர். டிரைவர் மற்றும் ஒரு சிறுவன் உள்பட 3 பேர் லேசான காயங்களுடன் தப்பினர்.
காயம் அடைந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவாடானை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் அவர்கள் அனைவரும் மேல்சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து குறித்து எஸ்.பி.பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.