சென்னை தாம்பரம் - செங்கோட்டை SF எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு இன்றுடன் (08-04-2024) தனது முதலமாண்டு சேவையினை நிறைவு செய்து இரண்டாமாண்டு அடியெடுத்து வைக்கிறது



 

திருவாரூர் திருத்துறைப்பூண்டி முத்துப்பேட்டை பட்டுக்கோட்டை அறந்தாங்கி காரைக்குடி வழியாக செல்லும் சென்னை தாம்பரம் - செங்கோட்டை SF  எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு இன்றுடன் (08-04-2024) தனது முதலமாண்டு சேவையினை நிறைவு செய்து இரண்டாமாண்டு அடியெடுத்து வைக்கிறது

திருவாரூர் திருத்துறைப்பூண்டி முத்துப்பேட்டை பட்டுக்கோட்டை அறந்தாங்கி ‌காரைக்குடி வழியாக
சென்னை தாம்பரம் - செங்கோட்டை சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் 01-06-2023 வியாழக்கிழமை முதல் வாரம் மும்முறை  இயக்கப்பட்டு வருகிறது 

வண்டி எண் 20683 சென்னை தாம்பரம் - செங்கோட்டை (Sun , Tue, Thu)

சென்னை தாம்பரம் - செங்கோட்டை ஒவ்வொரு வாரமும் 
ஞாயிறு செவ்வாய் வியாழன் கிழமைகளில் இரவு 9.00 மணிக்கு சென்னை தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு மறுநாள்  திங்கள் புதன் வெள்ளி கிழமைகளில் காலை 10.50 மணிக்கு   செங்கோட்டை சென்றடையும். 

வண்டி எண் 20684 செங்கோட்டை - சென்னை தாம்பரம் (Mon , Wed, Fri)

செங்கோட்டை - சென்னை தாம்பரம் ஒவ்வொரு வாரமும் திங்கள் புதன் வெள்ளி கிழமைகளில் மாலை 4.15 மணிக்கு செங்கோட்டையில் இருந்து புறப்பட்டு மறுநாள்  செவ்வாய் வியாழன் சனி கிழமைகளில் காலை 06.05 மணிக்கு சென்னை தாம்பரம் சென்றடையும்



தாம்பரம் செங்கோட்டை அதி விரைவு ரயில் இரு மார்க்கத்திலும் எங்கே எங்கே நின்று செல்லும் ?

விழுப்புரம் சந்திப்பு, 
திருப்பாதிரிப்புலியூர் (கடலூர்),
மயிலாடுதுறை சந்திப்பு,
திருவாரூர் சந்திப்பு,
திருத்துறைப்பூண்டி சந்திப்பு,
முத்துப்பேட்டை,
பட்டுக்கோட்டை,
அறந்தாங்கி,
காரைக்குடி சந்திப்பு, 
அருப்புக்கோட்டை,
விருதுநகர் சந்திப்பு, 
திருநெல்வேலி சந்திப்பு,
சேரன்மகாதேவி,
கல்லிடைக்குறிச்சி,
அம்பாசமுத்திரம்,
பாவூர்சத்திரம்,
தென்காசி சந்திப்பு, 

ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்

2வது பிறந்த நாள் காணும் தாம்பரம் - செங்கோட்டை ரயில்

20683/20684 தாம்பரம் - செங்கோட்டை - தாம்பரம் அதிவிரைவு ரயில் 08/04/2023 தனது முதல் சேவையினை தொடங்கியது.இந்த ரயில் இயங்கும் பாதையே முற்றிலும் மாறுபட்டது. தமிழ்நாட்டின் தலைநகரை தென் மாவட்டங்களிலிருந்து இணைக்க வேண்டுமென்றால் மதுரை அல்லது திருச்சிராப்பள்ளி மாநகரங்களை கடந்தே எல்லா‌ ரயில்களும் செல்லும். முதன்முறையாக இந்த இரயில் இந்த இரு மாநகரங்கள் வழியாக  அல்லாமல் சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தை அடைந்தது. இந்த ரயில் இயங்கும் பாதையின் காரணமாகவே இந்த ரயிலினை பல்வேறு விதமாக சிலர்‌ விமர்சனம் செய்து வந்தனர். இந்த ரயில் செங்கோட்டையிலிருந்து தாம்பரம் தான் செல்ல வேண்டுமென்றால் ராஜபாளையம் வழியாக விருதுநகர் வந்து சென்றிருக்கலாம் ஆனால் தென்காசி - திருநெல்வேலி பாதை மக்களுக்கு அதுவரை சென்னைக்கு ரயில் இல்லாததால் அந்த வழியாக சென்றது திருநெல்வேலி - விருதுநகர் வந்து அங்கிருந்து மதுரை வழியாக சென்றிருக்கலாம் ஆனால் அருப்புக்கோட்டை ரயில் நிலையத்திற்கு வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமே ரயில் வசதி இருக்கிறது வாரத்தில் கூடுதலாக மூன்று  நாட்கள் சென்னை ரயில் வசதி கொடுக்க அருப்புக்கோட்டை வழியாக வந்தது. இந்த ரயிலின் கால அட்டவணை, இயங்கும் நாட்கள் அருப்புக்கோட்டைகாகவே பிரத்தியேகமாக அமைக்கப்பட்டது. காரைக்குடி வழியாக செல்லும் ரயில் திருச்சி வழியாக சென்றிருக்கலாம் ஆனால் அதுவரை ரயில் சேவையே பெரிதும் இல்லாத காரைக்குடி - திருவாரூர் வழியாக இயக்கப்பட்டது. இவ்வாறாக ரயில் வசதி இல்லாதவர்களுக்காக தேடி தேடி ஊர் சுற்றி சுற்றி‌ சென்ற ஆபத்பாந்தவன் இன்றுடன் தனது முதலமாண்டு சேவையினை நிறைவு செய்கிறது தாம்பரம்- செங்கோட்டை அதிவிரைவு ரயில்.மேலும் இந்த ரயில் தினசரியாகவும் கூடுதல் பெட்டிகள் இணைத்து மற்றும் தேவையான கூடுதல் நிறுத்தங்கள் வழங்கி இந்த ரயில் இன்னும் அதிகம் அதிகம் அதன் சேவையினை வழங்க வேண்டும்.


தாம்பரம் - செங்கோட்டை ரயிலின் சில சிறப்புகள். 

👉 1904 ம் ஆண்டு முதல் மீட்டர் கேஜ்  ரயில்கள் இயங்கி  21.09.2012 அன்று  அகலப்பாதையாக மாற்றப்பட்டு பயணிகள் ரயில்கள் இயங்கி வந்த திருநெல்வேலி -  தென்காசி ரயில் வழித்தடத்தில் நிரந்தரமாக முதன் முதலாக சென்னைக்கு இயக்கப்படும் ரயில்.

👉 அம்பை,  பட்டுக்கோட்டை வழியாக முதன்முறையாக சென்னைக்கு நிரந்தர ரயில். 

 👉 பெட்டிகள் அனைத்தும் புத்தம் புதிய  ஜெர்மன் தொழில்நுட்பம் கொண்ட எல்எச்பி பெட்டிகள் ஆகும்.

👉 தாம்பரம் - திருவாரூர் இடையே மின்சார இன்ஜினிலும், திருவாரூர் -  செங்கோட்டை இடையே டீசல் இன்ஜினிலும் இயங்கும்.

👉 தாம்பரம் - செங்கோட்டை இரு மார்க்கத்திலும் 13 மணி 50 நிமிடங்கள் எடுத்துக்கொள்கிறது.

👉 முதல் முறையாக மதுரை மற்றும் திருச்சி செல்லாமல் தென் மாவட்டங்களில் இருந்து சென்னை செல்லும் ரயில்.

👉 தமிழகத்திற்கு உள்ளே புறப்பட்டு தமிழகத்திற்கு உள்ளே முடியும் ரயில்களில் அதிக தூரம் பயணிக்கும் முதல் ரயிலான  செந்தூர் எக்ஸ்பிரஸ்க்கு (778 கிமீ தூரம்) அடுத்தபடியாக நீண்ட தூரம் பயணிக்கும் ரயில்  (765 கிமீ).

தமிழ்நாட்டுக்கு உள்ளேயே பயணிக்கும் நீண்ட தூர ரயில்கள்

1. 12690 சென்னை சென்ட்ரல் - நாகர்கோவில் 883 கிமீ, சராசரி வேகம் 55 கிமீ, பயண நேரம் 16 மணி நேரம் 

வழி : காட்பாடி சேலம் நாமக்கல் கரூர் திருச்சி திண்டுக்கல் மதுரை விருதுநகர் திருநெல்வேலி 

2. 16105  சென்னை எழும்பூர் - திருச்செந்தூர் 776 கிமீ, சராசரி வேகம் 53 கிமீ, பயண நேரம் 14 மணி 45 நிமிடங்கள் நேரம்

வழி : விழுப்புரம் மயிலாடுதுறை தஞ்சாவூர்  திருச்சி திண்டுக்கல் மதுரை விருதுநகர் திருநெல்வேலி 

3. 20683  தாம்பரம் - செங்கோட்டை 765 கிமீ, சராசரி வேகம் 55 கிமீ, பயண நேரம் 13 மணி 50 நிமிடங்கள் நேரம்

வழி : விழுப்புரம் மயிலாடுதுறை திருவாரூர் திருத்துறைப்பூண்டி காரைக்குடி  விருதுநகர் திருநெல்வேலி தென்காசி 

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments