கோபாலப்பட்டிணத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளை சார்பில் பித்ரா வினியோகம்.!




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கோபாலப்பட்டிணம் கிளை சார்பில் 150 ஏழை குடும்பங்களுக்கு ஃபித்ரா எனும் நோன்பு பெருநாள் தர்மம் வழங்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டிணத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கிளை சார்பாக  150 எழை, எளிய குடும்பங்களுக்கு 2024 ஆண்டிற்கான நோன்பு பெருநாள்  ஃபித்ரா தவ்ஹீத் பள்ளிவாசலில் வழங்கப்பட்டது.

சமைப்பதற்கு தேவையான அரிசி & மளிகை பொருட்கள் அடங்கிய ஒரு தொகுப்பாக ஒவ்வொரு குடும்பங்களுக்கும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் கோபாலப்பட்டிணம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டு ஃபித்ரா பொருட்களை ஏழை குடும்பங்களுக்கு வழங்கினார்கள்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments