தொண்டி அருகே மோட்டார்சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் போலீஸ்காரர் உள்பட 2 பேர் பலியாகினர்.
நேருக்குநேர் மோதல்
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே எஸ்.பி.பட்டினம் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணிபுரிந்து வந்தவர் லெனின்(வயது 31). இவர் உத்தரகோசமங்கை அருகே உள்ள வித்தானூர் கிராமத்தை சேர்ந்தவர்.
இவர் நேற்று ராமநாதபுரத்தில் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்று விட்டு மோட்டார்சைக்கிளில் எஸ்.பி.பட்டினத்திற்கு சென்று கொண்டிருந்தார். திருவாடானையை அடுத்த மேல்பனையூரில் ஒரு பாலம் அருகே சென்றபோது மேலையூர் கிராமத்தை சேர்ந்த கொத்தனாரான பழனி(39) என்பவர் மற்றொரு மோட்டார்சைக்கிளில் வந்தார். எதிர்பாராதவிதமாக 2 மோட்டார்சைக்கிள்களும் ேநருக்கு நேர் மோதிக்கொண்டன.
2 பேர் பலி
இந்த விபத்தில் போலீஸ்காரர் லெனின், கொத்தனார் பழனி ஆகியோர் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். மேலும் பழனியுடன் வந்த கட்டிட தொழிலாளியான மேலையூர் கிராமத்தைச் சேர்ந்த கலா என்ற ெபண் படுகாயம் அடைந்தார். பின்னர் அவர் ஆம்புலன்ஸ் மூலம் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இந்த விபத்து குறித்து திருவாடானை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயபாண்டி, சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். விபத்தில் இறந்த 2 பேரின் உடல்களையும் மீட்டு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.