தொண்டி அருகே விபத்து மோட்டார் சைக்கிள்கள் மோதல்; போலீஸ்காரர் உள்பட 2 பேர் பலி பெண் படுகாயம்




தொண்டி அருகே மோட்டார்சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் போலீஸ்காரர் உள்பட 2 பேர் பலியாகினர்.

நேருக்குநேர் மோதல்

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே எஸ்.பி.பட்டினம் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணிபுரிந்து வந்தவர் லெனின்(வயது 31). இவர் உத்தரகோசமங்கை அருகே உள்ள வித்தானூர் கிராமத்தை சேர்ந்தவர்.

இவர் நேற்று ராமநாதபுரத்தில் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்று விட்டு மோட்டார்சைக்கிளில் எஸ்.பி.பட்டினத்திற்கு சென்று கொண்டிருந்தார். திருவாடானையை அடுத்த மேல்பனையூரில் ஒரு பாலம் அருகே சென்றபோது மேலையூர் கிராமத்தை சேர்ந்த கொத்தனாரான பழனி(39) என்பவர் மற்றொரு மோட்டார்சைக்கிளில் வந்தார். எதிர்பாராதவிதமாக 2 மோட்டார்சைக்கிள்களும் ேநருக்கு நேர் மோதிக்கொண்டன.

2 பேர் பலி

இந்த விபத்தில் போலீஸ்காரர் லெனின், கொத்தனார் பழனி ஆகியோர் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். மேலும் பழனியுடன் வந்த கட்டிட தொழிலாளியான மேலையூர் கிராமத்தைச் சேர்ந்த கலா என்ற ெபண் படுகாயம் அடைந்தார். பின்னர் அவர் ஆம்புலன்ஸ் மூலம் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இந்த விபத்து குறித்து திருவாடானை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயபாண்டி, சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். விபத்தில் இறந்த 2 பேரின் உடல்களையும் மீட்டு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments