கோபாலப்பட்டிணத்தில் நோன்பு பெருநாள் கொண்டாட்டம்!




இந்தியா மற்றும் தென் கிழக்கு ஆசிய நாடுகளில் 10-04-2024 நேற்று ரமாலன் மாதம் நோன்பு நிறைவடைந்த நிலையில் மஃரிப் தொழுகைக்கு பிறகு பிறை தேடப்பட்டது. அதன் அடிப்படையில் ஷாவ்வால் பிறை 11/04/2024 பெருநாள் தினமாக அறிவிக்கப்பட்டது.

11/04/2024 அன்று வியாழக்கிழமை கோபாலப்பட்டிணம் ஈத்கா மைதானத்தில் காலை 7.00 மணியளவில் நோன்பு பெருநாள் தொழுகை நடைபெற்றது. அதன் பிறகு குத்பா உரை, தூஆ செய்யப்பட்டது.

இதில் ஊர் மக்கள், பெரியோர்கள், சிறுவர்கள், இளைஞர்கள், தாய்மார்கள், சகோதரிகள் என ஏறாளமானோர் கலந்து கொண்டு கோபாலப்பட்டிணம் ஈத்கா மைதானத்தில் தொழுகையினை நிறைவேற்றி உற்சாகமாக பெருநாள் கொண்டாடினார்கள்.

மேலும் பெருநாள் தொழுகை முடித்துவிட்டு ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறி கொண்டு புகைப்படங்கள் எடுத்துகொண்டனர்.











எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments