நாடாளுமன்ற தேர்தலையொட்டி வாக்குச்சாவடி மையங்களுக்கு தேவையான பொருட்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
வாக்குச்சாவடிகள்
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 19-ந் தேதி நடைபெறுகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட கந்தர்வகோட்டை (தனி) சட்டமன்ற தொகுதியில் 239 வாக்குச்சாவடிகளும், புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் 266 வாக்குச்சாவடிகளும், கரூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட விராலிமலையில் 255 வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன.இதேபோல் சிவகங்கை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட திருமயம் சட்டமன்ற தொகுதியில் 274 வாக்குச்சாவடிகளும், ஆலங்குடி சட்டமன்ற தொகுதியில் 242 வாக்குச்சாவடிகளும், ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியில் 284 வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன.
எழுது பொருட்கள்
அந்தந்த சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர்களின், பெயர் சின்னம் அடங்கிய சீட்டு பொருத்தப்பட்டு பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளன. வாக்குப்பதிவுக்கான அனைத்து முன்னேற்பாடுகளையும் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். வாக்குப்பதிவு நாளன்று வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்தக்கூடிய பொருட்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
வாக்காளர் பட்டியல், எழுது பொருட்கள், மை, சாக்குப்பை, சீல் வைப்பதற்கான அரக்கு உள்பட 30 வகையான பொருட்களை தொகுதிக்குட்பட்ட அந்தந்த தாலுகா அலுவலகங்களில் சேகரித்து வைக்கின்றனர். வாக்குப்பதிவுக்கு முன்பாக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பி வைக்கப்படும் போது அந்த பொருட்களும் அனுப்பி வைக்கப்படும்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.