வாக்குச்சாவடிகள்
நாடாளுமன்ற தேர்தலில் புதுக்கோட்டை மாவட்டத்தில் 1,560 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. மாவட்டத்தில் திருச்சி தொகுதிக்குட்பட்ட கந்தர்வகோட்டை (தனி) சட்டமன்ற தொகுதியில் 1,01,921 ஆண் வாக்காளர்களும், 1,00,930 பெண் வாக்காளர்களும், 12 திருநங்கைகளும் என 2,02,863 வாக்காளர்களும், புதுக்கோட்டையில் 1,20,149 ஆண் வாக்காளர்களும், 1,25,677 பெண் வாக்காளர்களும், 23 திருநங்கைகளும் என மொத்தம் 2,45,849 வாக்காளர்களும் உள்ளனர்.
சிவகங்கை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட திருமயம் சட்டமன்ற தொகுதியில் 1,14,124 ஆண் வாக்காளர்களும், 1,20,060 பெண் வாக்காளர்களும், 5 திருநங்கைகளும் என 2,34,189 வாக்காளர்களும், ஆலங்குடி சட்டமன்ற தொகுதியில் 1,04,988 ஆண் வாக்காளர்களும், 1,06,292 பெண் வாக்காளர்களும், 3 திருநங்கைகளும் என 2,11,283 வாக்காளர்களும் உள்ளனர்.
மொத்த வாக்காளர்கள்
கரூர் நாடாளுமன்ற தொகுதிக்குபட்ட விராலிமலை சட்டமன்ற தொகுதியில் 1,09,970 ஆண் வாக்காளர்களும், 1,11,942 பெண் வாக்காளர்களும், 15 திருநங்கைகளும் என மொத்தம் 2,21,927 வாக்காளர்களும், ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியில் 1,13,582 ஆண் வாக்காளர்களும், 1,15,667 பெண் வாக்காளர்களும், 1 திருநங்கையும் என 2,29,250 வாக்காளர்கள் உள்ளனர்.
மாவட்டத்தில் 6,64,734 ஆண் வாக்காளர்களும், 6,80,568 பெண் வாக்காளர்களும், 59 திருநங்கைகளும் என மொத்தம் 13,45,361 வாக்காளர்களும் உள்ளனர். வாக்குப்பதிவு நேற்று காலை 7 மணிக்கு தொடங்கியதும் வாக்காளர்கள் ஆர்வமுடன் வாக்களிக்க வந்தனர். முதலில் வாக்குப்பதிவு மெதுவாக நடைபெறுவதை போல் இருந்தது. ஒரு சில இடங்களில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பழுதானதால் தாமதமானதாக கூறப்படுகிறது. இருப்பினும் அதனை அதிகாரிகள் சரி செய்ததும் வாக்குப்பதிவு சீராக நடைபெற்றது.
வாக்குப்பதிவு அதிகரிப்பு
புதுக்கோட்டை மாவட்டத்தில் காலை 7 மணி முதல் 9 மணி வரை 11.04 சதவீதம் வாக்குப்பதிவாகியிருந்தது. அதன்பின் நேரம் செல்ல செல்ல... மக்கள் வாக்களிக்க வாக்குச்சாவடிகளுக்கு வரத்தொடங்கினர். இதனால் வாக்குப்பதிவு சதவீதம் அதிகரிக்க தொடங்கியது. காலை 9 முதல் 11 மணி வரை வாக்குப்பதிவு 25.45 சதவீதமும், காலை 11 மணி முதல் பகல் 1 மணி வரை 43.19 சதவீதமும் பதிவானது. தொடர்ந்து பகல் 1 மணி முதல் மதியம் 3 மணி வரை 54.90 சதவீதமும், மதியம் 3 மணி முதல் மாலை 5 மணி வரை 66.09 சதவீதமும் பதிவானது.
மதியத்திற்கு மேல் மக்கள் அதிகளவில் வாக்களித்தனர். இதனால் வாக்குப்பதிவு சதவீதம் ஓரளவு அதிகரித்தது. மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்தது.
71.72 சதவீதம்
மாலை 6 மணிக்கு பிறகு ஒரு சில இடங்களில் வாக்காளர்கள் இருந்ததால் டோக்கன் அடிப்படையில் வாக்குப்பதிவு நடைபெற்றது. அதன்பின் வாக்குப்பதிவு கணக்கிடப்பட்டு அறிவிக்கப்பட்டது. இதில் புதுக்கோட்டை மாவட்டத்தில் 71.72 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தது. மொத்தம் 13,45,361 வாக்காளர்களில் 9,62,496 பேர் வாக்களித்து இருந்தனர். கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் புதுக்கோட்டை மாவட்டத்தில் 74.1 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தது. இந்த தேர்தலில் சற்று குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.