திருவாடானை தாலுகா எஸ்.பி.பட்டினத்தில் நண்பர்கள் நற்பணி சங்கம் சார்பில் 46-ம் ஆண்டு மாநில அளவிலான மின்னொளி கைப்பந்து போட்டி நடைபெற்றது. போட்டியை எஸ்.பி.பட்டினம் ஜமாத் தலைவர் ஹசன் அலி, திருவாடானை யூனியன் தலைவர் முகமது முக்தார் மற்றும் ஜமாத் நிர்வாகிகள் தொடங்கி வைத்தனர்.
இதில் சென்னை, புதுச்சேரி, கீழக்கரை, ராமநாதபுரம், தொண்டி உள்ளிட்ட 12 அணிகள் கலந்து கொண்டு விளையாடின.இதில் முதல் பரிசை எஸ்.பி.பட்டினம், எஸ்.ஆர்.அண்ட் கோ அணியும், 2-வது பரிசை சன் ஸ்டார் அணியும், 3-வது பரிசை டி.கே.எஸ். அணியும், 4-வது பரிசை கே.எம்.ஆர்.குரூப் அணியும் பெற்றன.
வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுத்தொகை மற்றும் கோப்பைகளை திருவாடானை யூனியன் தலைவர் முகமது முக்தார், நண்பர்கள் நற்பணி சங்கத் தலைவர் அப்துல் அஜீஸ், விளையாட்டு குழு தலைவர் கலந்தர் அலி, செயலாளர் செய்யது ரபீக், பொருளாளர் ஹாரூன் ரஷீத் மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் வழங்கினர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.