மீமிசல் அருகே மாட்டு வண்டி எல்கை பந்தயம்




மீமிசல் அருகே சேமங்கோட்டையில் வில்லாயுதமுடைய அய்யனார், தூண்டி கருப்பர், ராக்காச்சி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சித்ரா பவுர்ணமியையொட்டி மாட்டுவண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை, தஞ்சை, தேனி, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 8 பெரியமாடுகளும், 18 சின்னமாடுகளும், 42 பூஞ்சிட்டு மாடுகள் என மொத்தம் 68 ஜோடி மாடுகள் கலந்து கொண்டன. இதையடுத்து 3 பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் கலந்து கொண்ட மாடுகள் வெற்றி இலக்கை நோக்கி சீறிப்பாய்ந்து சென்றன. பின்னர் வெற்றி பெற்ற மாடுகளின் உரிமையாளர்களுக்கு ரொக்க பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் மாடுகளை சிறப்பாக ஓட்டி வந்த சாரதிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த பந்தயத்தை கிழக்கு கடற்கரை சாலையின் இருபுறத்திலும் ரசிகர்கள் திரண்டு கண்டு களித்தனர். மீமிசல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments