12-ஆம் வகுப்பு தேர்வு முடிவு: கோபாலப்பட்டிணம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 90% பேர் தேர்ச்சி! வணிகவியல் பாடத்தில் சென்டம் அடித்த மாணவி!!



கோபாலப்பட்டிணம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 12-ஆம் தேர்வில் 90% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். வணிகவியல் படத்தில் யசோதாமாரி என்ற மாணவி வணிகவியல் படத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றுள்ளார்.

தமிழகத்தில் 2023-24 ஆம் கல்வியாண்டுக்கான 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு கடந்த மார்ச் 1 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்தத் தேர்வை தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டிருந்த 3 ஆயிரத்து 302 மையங்களில் 4.13 லட்சம் மாணவியர், 3.58 லட்சம் மாணவர்கள், ஒரு திருநங்கை என மொத்தம் 7.80 லட்சம் பேர் தேர்வெழுத தகுதி பெற்றிருந்தனர். இதில் 21 ஆயிரத்து 875 தனித்தேர்வர்கள், 125 சிறைவாசிகளும் அடங்குவர். வினாத்தாள் திருத்தும் பணிகள் மாநிலம் முழுவதும் ஏப்ரல் 2 முதல் 13 வரை நடைபெற்றது.  12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 6-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.

தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று 06.05.2024 காலை 9.30 மணிக்கு வெளியானது.

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டானிபுரசக்குடி ஊராட்சிக்குட்பட்ட மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டிணத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது.

இங்கு 2023-24 ஆம் கல்வியாண்டுக்கான தேர்வினை 51 பேர் எழுதினர். இதில் 30 பேர் மாணவி, 21 பேர் மாணவர் அடங்குவர். இதில் 90% (46/51) மாணவர்கள் தேர்ச்சி பெற்று தங்களது கல்வியை அடுத்த நிலைக்கு முன்னேறியுளனர், அதேசமயம் 10% மாணவர்களின் வெற்றி வாய்ப்பு தள்ளிப்போய் உள்ளது. விரைவில் அவர்களும் மறு தேர்வு எழுதி தங்களது கல்வியில் அடுத்த கட்டத்திற்கு முன்னேற்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

முதல் மூன்று இடங்களை பெற்றவர்கள் விபரம்:

1.G.யசோதாமாரி- 526/600
2.M.தேவிகா- 478/600
3.J.அஸ்வானா பர்வீன்- 465/600

யசோதாமாரி என்ற மாணவி வணிகவியல் பாடத்தில் 100/100 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார். தேர்வு எழுதிய மாணவிகள் அனைவரும் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மாணவர்களை தேர்வுக்கு தயார்படுத்தி அதில் 90% சதவீதம் மாணவர்களை தேர்ச்சி பெற செய்த தலைமை ஆசிரியர் உள்ளிட்ட ஆசிரியர்களுக்கு பெற்றோர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் மற்றும் GPM மீடியா சார்பில் பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.

வரக்கூடிய கல்வியாண்டில் இப்பள்ளி 100% தேர்ச்சி விகிதம் பெற தலைமை ஆசிரியர் உள்ளிட்ட ஆசிரியர்களுக்கு GPM மீடியா வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.

G.யசோதாமாரி- 526/600

M.தேவிகா- 478/600

J.அஸ்வானா பர்வீன்- 465/600

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments