ஆவுடையார்கோவில் பகுதியில் மர்மமான முறையில் இளைஞர் உயிரிழப்பு




ஆவுடையார்கோவில் பகுதியில் மர்மமானமுறையில் இளைஞர் உயிரிழந்துள்ளார். போதையால் உயிரிழப்பா. வெயியின் தாக்கமா அல்லது வேறு ஏதேனும் காரணமா என பல கோணத்தில் காவல்துறை விசாரணை கடந்த பத்து நாட்களாக ஆவுடையார்கோவில்பகுதியில் சுமார் 107 பாரன் ஹீட்டுக்கு  மேலே சூரியவெப்பம் உள்ளதால் வெப்ப அலை வீசி வருகிறது. இந்திலையில் ஆவுடையார்கோவில் குறிச்சிகுளம் மாரியம்மன் கோவிலில் அருகாமையில் உள்ள குளத்தில் இறந்த நிலையில் ஒருவர் கிடப்பதாக காவல்துறையினருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தால். அதைத்தொடர்ந்து காவல்துறையினர் அங்கு சென்று பார்த்தபோது அவர் கமலகுடி கிராமத்தை சேர்ந்த மாணிக்கவாசகம் வயது 34 என்பது தெரிய வந்தது. உடனே அவரை ஆம்புலன்ஸ் உதவியுடன் ஆவுடையார்கோவில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.


அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளார்கள். அதைத்தொடர்ந்து அவரின் உடல்உடல்கறு ஆய்வுக்காக ஆவுடையார்கோவில் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. மாணிக்கவாசகம் இறப்பு குடியினாலா? அல்லது அதிக வெப்ப அலை வீசுவதாலா? என்று உடற்கூறு ஆய்வுக்குப் பின்பே தெரிய வரும் எனவே மர்மமான முறையில் இளைஞர் இறந்து கிடந்தது ஆவடையார்கோவில் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments