தொண்டி அருகே சுற்றுலா பயணிகளை கடலுக்குள் அழைத்து சென்ற நாட்டுப்படகு பறிமுதல்




தொண்டி அருகே உள்ள எம்.ஆர்.பட்டினம் மீனவர் கிராமத்தில் மீன்பிடிப்பதற்காக பயன்படுத்தும் நாட்டு படகில் சுற்றுலா பயணிகளை ஏற்றிக்கொண்டு கடலில் படகு சவாரி செய்வதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் தொண்டி கடலோர காவல் படை போலீசார், மீன்வள மேற்பார்வையாளர் கணேஷ் குமார் மற்றும் சாகர மித்ரா பணியாளர்கள் எம்.ஆர்.பட்டினம் கடற்கரையில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது சுற்றுலா பயணிகளை படகில் ஏற்றி கடலுக்குள் சென்றுவிட்டு கரையில் இறக்கி விடும்போது தொண்டியை சேர்ந்த காஜாமைதீன் என்பவருக்கு சொந்தமான பதிவு எண் இல்லாத நாட்டுப்படகை பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் அந்த நாட்டுப்படகு தொண்டி கடலோர போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது. இது தொடர்பாக கடலோர போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments