பள்ளி வாகனங்கள்
புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளி மாணவ-மாணவிகளின் பாதுகாப்பு கருதி வாகனங்களை ஆய்வு செய்யும் பணி புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்த ஆய்வில் பங்கேற்க மாவட்டம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளின் வேன்கள், பஸ்கள் முறையாக பராமரித்து எடுத்து வர அறிவுறுத்தப்பட்டிருந்தன. இதில் 549 வாகனங்கள் பங்கேற்க அழைக்கப்பட்டிருந்ததில் 265 வாகனங்கள் வந்திருந்தன. அதனை இயக்கும் டிரைவர்கள் மற்றும் நடத்துனர்களும் வந்திருந்தனர்.
கூடுதல் கலெக்டர் அப்தாப் ரசூல் தலைமையில் ஆர்.டி.ஓ.க்கள் ஜெயந்தி, சிவகுமார், வட்டார போக்குவரத்து அதிகாரி ஜெய்சங்கர் உள்பட மோட்டார் வாகன அதிகாரிகள் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்தனர்.
பாதுகாப்பு உபகரணங்கள்
இந்த ஆய்வில் பள்ளி வாகனங்களுக்கு முறையாக பதிவுச்சான்று, காப்புச்சான்று, அனுமதிசீட்டு உள்ளதா?, வாகனங்களில் பாதுகாப்பு உபகரணங்கள் உள்ளதா? தீயணைப்பான் கருவி, வேகக்கட்டுப்பாட்டு கருவி, முதலுதவி பெட்டி உள்ளிட்டவையும், வாகனங்களில் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதா? என்பதையும் அதிகாரிகள் பார்வையிட்டனர்.
ஆய்வின் போது வாகனங்கள் சரியாக பராமரிக்கப்படாததை சரி செய்து கொண்டு வர அதிகாரிகள் அறிவுறுத்தினர்.
இதில் 24 வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டன. ஆய்வுக்கு வராத மற்ற வாகனங்கள் அடுத்தடுத்து ஆய்வுக்குட்படுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.