கோபாலப்பட்டிணம் மீமிசல் பகுதியில் கோடை மழை




கோபாலப்பட்டிணம் மீமிசல் பகுதியில்  கோடை மழை பெய்து வருகிறது. 

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு இலங்கை கடலோரப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

தமிழகத்தில் வெயிலின் தாக்கம் வழக்கத்தை காட்டிலும் அதிகமாக இருந்து வருகிறது.

 அக்னி நட்சத்திரம் தொடங்கிய நிலையில் வெயிலின் தாக்கம் மேலும் அதிகமாகக் காணப்பட்டது. பொதுமக்கள் வெளியே செல்லாது வீட்டுக்குள் முடங்கும் நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா மீமிசல் கோபாலப்பட்டிணம் பகுதியில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது  இன்று மே 16 அதிகாலை முதல் வானம் மேக மூட்டங்களுடன் காணப்பட்ட நிலையில், அதிகாலை 1.50 மணிக்கு மேல் இடி மின்னலுடன் மழை பெய்யத் தொடங்கியது.

வெயில் தாக்கம் காரணமாக தொடர்ந்து அவதியுற்று வந்த மக்களுக்கு இந்த மழை சற்று நிம்மதியைத் தந்துள்ளது.

மழையால் ஒரு சில இடங்களில் தாழ்வான பகுதியில்   தண்ணீர் தேங்கியுள்ளது.

தற்போது பெய்த  மழையினால்  பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

கோபாலப்பட்டிணத்தில் காட்டுத்குளம் நெடுங்குளம் மக்கள் குளிப்பதற்கு பயன்படுத்தி வருகிறார்கள் நெடுங்குளத்தில்  குறைவான அளவில் தண்ணீர் உள்ளது..காட்டுக்குளத்லில் குளிப்பதற்கு ஓரளவு தண்ணீர் உள்ளது ஆனால்  நெடுங்குளம்  எப்போது நிரம்பும் மக்கள் காத்து கொண்டு உள்ளார்கள்.







எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments