கிருஷ்ணாஜிப்பட்டிணத்தில் SDPI கட்சியின் புதுக்கோட்டை கிழக்கு மாவட்டத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம்




SDPI கட்சி புதுக்கோட்டை கிழக்கு மாவட்டத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம்  (17.05.2024) மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தை மாவட்ட பொருளாளர் M.முகமது அஜீஸ் அவர்கள் வரவேற்புரையாற்றி தொடங்கி வைத்தார், மாவட்ட தலைவர் U.செய்யது அஹமது அவர்கள் தலைமையேற்று தலைமையுரை ஆற்றினார். மாவட்ட செயலாளர் M.முகமது அபுதாலிபு அவர்கள் முன்னிலை வகித்தார். மேலும் கூட்டத்தில் மாவட்ட, தொகுதி நிர்வாகிகள் மற்றும் துணை அமைப்புகளின் மாவட்ட நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் ஜூன் 21 கட்சியில் 16 ஆம் ஆண்டு துவக்க தினத்தை கொண்டாடும் விதமாக தொகுதி , நகர மற்றும் கிளை வாரியாக மக்களுக்கான நலதிட்ட உதவிகள் செய்வது குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

மேலும் கூட்டத்தில் அறந்தாங்கி தெற்கு தொகுதி செயலாளராக அம்மா பட்டினம் இஸ்மாயில் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இறுதியாக அறந்தாங்கி வடக்கு தொகுதி தலைவர் சேக் இஸ்மாயில் அவர்கள் நன்றியுரை ஆற்றி கூட்டத்தை நிறைவு செய்தார்.

வெளியீடு,
சமூக ஊடக அணி
SDPI கட்சி 
புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments