சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து தாய்லாந்து மற்றும் சவுதி அரேபியாவுக்கும், உள்நாட்டு முனையத்தில் துர்காப்பூருக்கும் இடையே கூடுதல் விமான சேவைகள் தொடங்கப்பட்டுள்ளதால் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். பயணிகளின் வசதிக்காக இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் நிறுவனம், சென்னையில் இருந்து தாய்லாந்து நாட்டு தலைநகர் பாங்காக் நகருக்கும், பாங்காக்கிலிருந்து சென்னைக்கும் 2 விமான சேவைகளை புதிதாக கடந்த 15ம் தேதியில் இருந்து இயக்கத் தொடங்கியுள்ளது. இந்த விமான சேவைகள் வாரத்தில் 4 நாட்கள் இயக்கப்படுகின்றன.
அதேபோல் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம், சென்னையில் இருந்து சவுதி அரேபியாவின் தமாமிற்கும், தாமாமில் இருந்து சென்னைக்கும் இடையே 2 விமான சேவைகளை வரும் ஜூன் மாதம் 1ம் தேதியில் இருந்து புதிதாக இயக்கத் தொடங்குகிறது. இந்த விமான சேவைகள் வாரத்தில் 2 நாட்கள் செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் நேரடி விமானமாக இயக்கப்படுகிறது. மேலும் சென்னை உள்நாட்டு விமான நிலையத்திலிருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான நிறுவனம், மேற்குவங்க மாநிலம் துர்காப்பூருக்கும், அதைப்போல் துர்காப்பூரிலிருந்து சென்னைக்கும் புதிதாக நேரடி விமான சேவை, கடந்த 16ம் தேதியிலிருந்து தொடங்கப்பட்டுள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.