புதுக்கோட்டை மாநகராட்சியோடு ஊராட்சிகளை சேர்ப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து நகராட்சி அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டு மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
11 ஊராட்சிகளை இணைத்து...
கடந்த மாதம் புதுக்கோட்டை நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. அதன்படி மாநகராட்சியில் திருக்கட்டளை, தேக்காட்டூர் உள்ளிட்ட 11 ஊராட்சிகளை இணைத்து மாநகராட்சி உருவாக்கப்படும் என்றும் அரசு அறிவித்தது.
இதற்கு திருக்கட்டளை, தேக்காட்டூர் உள்ளிட்ட பல பஞ்சாயத்துகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. குறிப்பாக மாநகராட்சியோடு இணைத்தால் 100 நாள் வேலைத்திட்டம் பறிபோகும், வரி உயர்த்தப்படும் என்பதால் மாநகராட்சியோடு இதனை இணைக்க கூடாது என்று பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
முற்றுகை
இந்நிலையில் வேண்டாம் மாநகராட்சி கூட்டமைப்பு சார்பாக நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் புதுக்கோட்டை மாநகராட்சியோடு 11 ஊராட்சிகளை இணைக்க கூடாது என தீர்மானம் நிறைவேற்ற கோரி மனுக்களை அதிகாரிகளிடம் அளித்தனர். அதன்பின் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.