புதுக்கோட்டை மாவட்டத்தில் சீமைக்கருவேல மரங்களை முற்றிலுமாக அகற்றிட வேண்டும் என்று துறை அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.
சீமைக்கருவேல மரங்கள்
புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள குளங்களை, மாவட்ட நிர்வாகம் சார்பில், தூர்வாரும் பணி மற்றும் குளக்கரைகளில் வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணியினை, மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா பார்வையிட்டார். அதன்பின் கலெக்டர் தெரிவித்ததாவது:- மாவட்டம் தோறும் சீமைக்கருவேல மரங்களை அகற்றி நன்மை தரும் மரங்களை நடவு செய்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, புதுக்கோட்டை மாவட்டத்தில், ஊரக உள்ளாட்சிப் பகுதிகள், பேரூராட்சிகள் மற்றும் நகராட்சிப் பகுதிகளில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பாக, திருத்தியமைக்கப்பட்ட மாவட்ட அளவிலான கண்காணிப்புக் குழு கூட்டம், மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கடந்த 20-ந் தேதி நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம் 100 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இங்கு பல்வேறு வகையான மரம், செடி, கொடிகள் வளர்ந்துள்ளது. அந்தவகையில், இந்த வளாகத்தினுள் வளர்ந்துள்ள கருவேல மரங்கள், முட்புதர்களை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. மாவட்ட அளவிலான கண்காணிப்புக் குழு கூட்டத்தின் நடவடிக்கைகளின்படி, வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ), உதவி வேளாண்மை அலுவலர், வனச்சரக அலுவலர், கிராம நிர்வாக அலுவலர், ஊராட்சி செயலர் ஆகியோர் உறுப்பினர்களாக கொண்ட வட்டார அளவிலான குழு அமைக்கப்பட்டுள்ளது.
முழுமையாக அகற்றிட...
அந்தவகையில், முதற்கட்டமாக ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திற்கும் ஒரு கிராம ஊராட்சி வீதம் 13 ஊராட்சி ஒன்றியங்களிலும் 13 கிராம ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டு அவ்வூராட்சிகளில் தனிநபர் மற்றும் பொது இடங்களில் உள்ள சீமைக் கருவேல மரங்களை முழுவதும் அகற்றிடவும், அகற்றப்பட்ட பொது இடங்களில் நிழல் தரும், பலன் தரும் உள்ளூர் மரங்களை நடவு செய்து பராமரித்திடவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில், சீமைக்கருவேல மரங்களை முற்றிலுமாக அகற்றிட சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, சீமைக்கருவேல மரங்கள் அகற்றிடும் பணிகள் மாவட்டம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு) ரம்யாதேவி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) முருகேசன், உதவி இயக்குனர் (கனிமங்கள்) லலிதா, வட்டாட்சியர் பரணி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.