தகவல் அறியும் உரிமை விண்ணப்பத்திற்கு 1550 நாட்களாக பதில் அளிக்காமல் இழுத்தடிப்பு மனுதாரருக்கு ரூ.10 ஆயிரம் வழங்க தாசில்தாருக்கு உத்தரவு




தகவல் அறியும் உரிமை விண்ணப்பத்திற்கு 1550 நாட்கள் பதில் அளிக்காமல் இழுத்தடித்ததால், மனுதாரருக்கு தாசில்தார் ரூ.10 ஆயிரம் இழப்பீடு வழங்க தமிழ்நாடு தகவல் ஆணையம் உத்தரவிட்டது.

போடி தாசில்தார் அலுவலகம்

மதுரை சத்ய சாய் நகர் பகுதியை சேர்ந்தவர் என்.ஜி.மோகன், முன்னாள் போக்குவரத்து துறை ஊழியர். கடந்த 2019-ம் ஆண்டு இவர் தேனி மாவட்டம் போடி தாசில்தார் அலுவலகத்திற்கு உட்பட்ட மேல சொக்கநாத கிராமத்தில் உள்ள நிலம் தொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பல்வேறு கேள்விகளை முன் வைத்து விண்ணப்பம் அளித்துள்ளார், ஆனால் அது தொடர்பாக தாசில்தார் அலுவலகத்தில் இருந்து முறையான தகவல் எதுவும் அவருக்கு கிடைக்கவில்லை.

இந்த நிலையில் சுமார் 1550 நாட்களைக் கடந்த நிலையில், தாசில்தார் அலுவலகம் முறையாக பதில் அளிக்காததால் மேல்முறையீடு செய்திருக்கிறார், அவ்வாறு மனு செய்தும் முறையாக பதில் அளிக்காமல் இருந்துள்ளனர். எனவே சென்னையில் தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்.

ரூ.10 ஆயிரம் இழப்பீடு

அது தொடர்பாக தகவல் ஆணையம் விசாரணை மேற்கொண்டது. அதில் தாசில்தார் அலுவலகத்தில் இருந்து பதில் அளிக்காமல் அலைக்கழிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது. அதை தொடர்ந்து தாசில்தார் மணிமாறன் ரூ.10 ஆயிரம் இழப்பீடாக வழங்க தகவல் ஆணையம் உத்தரவிட்டது.

எனவே தாசில்தார் தன்னுடைய சொந்த பணத்தில் ரூ.10 ஆயிரத்திற்கான வங்கி வரைவோலையை மோகனுக்கு தபால் மூலம் அனுப்பிவைத்துள்ளதாகவும், மேலும் அவர் கேட்ட ஆவணங்களையும் அனுப்பி இருப்பதாகவும் மோகன் கூறினார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments