ஆவுடையார்கோவிலை அடுத்த பெருநாவலூரில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2024-25-ம் கல்வி ஆண்டிற்கான இளநிலை மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடைபெற்று வருகிறது.
முதலாம் ஆண்டு தமிழ், ஆங்கிலம், வணிகவியல், வணிக நிர்வாகவியல், கணிதம், இயற்பியல் மற்றும் கணினி அறிவியல் ஆகிய பாடப்பிரிவுகளுக்கு கலந்தாய்வு நடைபெறுகிறது. மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவத்தினர் குழந்தைகள் ஆகியோருக்கான சிறப்பு கலந்தாய்வு நடைபெற்று தேர்வு பெற்றவர்களுக்கு சேர்க்கை ஆணையை கல்லூரி முதல்வர் பாலமுருகன் வழங்கினார். இதனை தொடர்ந்து வருகிற ஜூன் 10-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை பொதுப்பிரிவு முதல் கட்ட கலந்தாய்வும், ஜூன் 24-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை 2-ம் கட்ட கலந்தாய்வும் நடைபெற இருக்கிறது. மாணவர்களுக்கு கலந்தாய்வு குறித்து செல்போன் வழியாக தகவல் தெரிவிக்கப்படவுள்ளது. மேலும் பொதுப்பிரிவு கலந்தாய்வுக்கு வரும் மாணவர்கள் உரிய கல்வி சான்றிதழ்களுடன் குறித்த நாட்களில் கலந்து கொள்ள வர வேண்டும் என்று கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.