ஆவுடையார்கோவில் அருகே பயங்கரம்: மகனை வெட்டிக்கொன்ற தந்தை மதுபோதையில் தகராறு செய்ததால் ஆத்திரம்



ஆவுடையார்கோவில் அருகே மதுேபாதையில் தகராறு செய்ததால் மகனை தந்தையே வெட்டிக்கொலை செய்தார்.


தகராறு

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் அருகே வீரமங்கலம் கிராமம் காமராஜர் நகரை சேர்ந்தவர் முத்துவேல் (வயது 70). இவரது மகன் மோகன் (45). இவருடைய மனைவி ஜெகதீஸ்வரி (40). இவர்களுக்கு 5 பெண் குழந்தைகள் உள்ளனர். மோகன் தினமும் மது குடித்து விட்டு வந்து தனது மனைவி, குழந்தைகளிடம் தகராறு செய்து வந்தார்.

இதனால் ஜெகதீஸ்வரி தனது குழந்தைகளை அழைத்துக்கொண்டு திண்டுக்கல் அருகே உள்ள தந்தை வீட்டிற்கு சென்று விட்டார். இதற்கிடையே, தினமும் மது குடித்து விட்டு வீ்ட்டிற்கு வரும் மோகனுக்கும், முத்துவேலுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது.

வெட்டிக்கொலை

இந்த நிலையில், வீரமங்கலம் கிராமத்தில் திருவிழா நடைபெற்று வந்தது. இதனால் முத்துவேல் திருவிழாவிற்கு வருமாறு ஜெகதீஸ்வரி மற்றும் குழந்தைகளை அழைத்துள்ளார். அவர்களும் திருவிழாவிற்கு வந்தனர். நேற்று முன்தினம் இரவு மோகன் வழக்கம்போல் மதுகுடித்து விட்டு வீட்டிற்கு வந்து, மனைவி, குழந்தைகளை அடித்து துன்புறுத்தினார். இதனை தடுத்த தாய்-தந்தையையும் தாக்கினார்.

இதனால் தந்தைக்கும், மகனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த முத்துவேல் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து மோகன் கழுத்தில் வெட்டினார். இதில் மோகன் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

கைது

இதுகுறித்து ஆவுடையார்கோவில் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜய் கோல்டன்சிங் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் மோகன் உடலை கைப்பற்றி பிரேத பரிேசாதனைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்துவேலை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மதுபோதையில் தகராறு செய்த மகனை தந்தையே அரிவாளால் வெட்டிக்கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments