மீமிசல் அருகே சேமன்கோட்டை கிழக்கு கடற்கரைச் சாலையில் சரக்கு வாகனமும், காரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா மீமிசல் அருகே உள்ள சேமன்கோட்டை கிழக்கு கடற்கரைச் சாலையில் இன்று 03.05.24 காலை 6 மணி அளவில் கேரளாவில் இருந்து சுற்றுலா வந்த காரும் மீமிசலில் இருந்து தண்ணீர் ஏற்றிக் கொண்டு சென்ற சரக்கு வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.
கேரளாவில் இருந்து வந்த காரில் இரண்டு சிறுவர்கள் உட்பட ஐந்து பேர் பயணித்தனர். தண்ணீர் ஏற்றி சென்ற சரக்கு வாகனத்தில் ஓட்டுநர் மட்டும் சென்றுள்ளார். சேமன் கோட்டை பாலம் அருகே கிழக்கு கடற்கரைச் சாலையில் வாகனங்கள் எதிர் எதிரே வந்து கொண்டிருந்தன. அப்பொழுது எதிர்பாராத விதமாக இரண்டு வாகனங்களும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
விபத்து ஏற்பட்டதில் காரில் பயணித்த சிறுமிக்கு தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்டது, தண்ணீர் வாகன ஓட்டுநர் உட்பட மற்ற அனைவருக்கும் உடலில் ஆங்காங்கே காயங்கள் ஏற்பட்ட நிலையில் ஆம்புலன்ஸ் மூலம் மணமேல்குடி மருத்துவமனைக்கு கொண்டு அங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.