ஆவுடையார்கோவில் தாசில்தார் அலுவலகத்தில் 1433 ம் பசலிக்கான வருவாய் தீர்வாயம் மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா பங்கேற்பு






புதுக்கோட்டை மாவட்டம்  ஆவுடையார்கோவில் தாசில்தார் அலுவலகத்தில் 1433ம்பசலிக்கானவருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) மாவட்ட ஆட்சித் தலைவரும் மற்றும் ஜமாபந்தி அலுவலருமான மெர்சி ரம்யா தலைமையிலும், ஆவுடையார்கோவில் தாசில்தார் மார்ட்டின் லூதர் கிங் முன்னிலையிலும்நடைபெற்ற து,ஆவுடையார்கோவில்தாலு காவில்ஆவுடையார் கோவில், - பொன்பேத்தி, மீமிசல், ஏம்பல் - உள்பட நான்கு பிர்காக்கள் உள்ளன. மொத்தம் 39 வருவாய் வட்டங்கள் உள்ளன * | அதில்நேற்று பொன்பேத்தி பிர்க்காவில் உள்ள 9 வட்டத்தில்.வருவாய் தீர்வாயம் நடைபெற்றது. 

அதில் பொன்பேத்தி பிர்க்காவில் உள்ள 9 வட்டத்தில் உள்ள பொதுமக்களிடம் மாவட்ட ஆட்சித் தலைவரும் ஜமாபந்தி அலுவலர் மனுக்களை பெற்றுக்கொண்டு மனுகொடுத்த வர்களிடம் அவர்களை பக்கத்தில் இருக்கையில் அமரவைத்து அவர்களின் கோரிக்கைகளை கணிவுடன் கேட்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொதுக்களிடம் கூறினர், கிராம கணக்குகளை ஆய்வு செய்துதணிக்கை செய்தனர், தொடர்ந்து எதிர்வரும் 20ம் தேதி. மீமிசல் பிற்காவில் 11 வட்டத்திலும், 21 ம் தேதி ஏம்பல் பிர்காவில் 9 வட்டத்திலும், கடைசியாக25ம் தேதி ஆவுடையார்கோவில் பிர்காவில்உள்ள 10வட்டங்களில் மாவட்ட ஆட்சித் தலைவரும், ஜமாபந்தி அலுவலர் தலைமையில்ஜமாபந்தி நடைபெறும்

அன்றைய தினம்
பொதுமக்களிடம் மனுக்கள் பெறப்பட்டு மனுக்களுக்கு தீர்வு காணப்படும், அன்று மாலை குடிகள் மாநாடு நடைபெறும்இதில் பொதுமக்களிடம் பெறப்பட்ட மனுக்களுக்கு உடனடி தீர்வும், தீர்வுஎட்டப்படாத மனுக்களுக்கு அதற்கான காரணங்களும் அதிகாரிகளால் வழங்கப்படும். இந்த வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தியில்) துணை தாசில்தார்கள், வருவாய் அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் மற்றும் பொதுமக்கள்உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments