திருத்துறைப்பூண்டியில் திருவாரூர் - மன்னார்குடி - முத்துப்பேட்டை சாலைகளை இணைக்கும் 2ம் கட்ட புறவழிச்சாலை பணிக்கு ரூ.11.50 கோடி ஒதுக்கீடு






திருத்துறைப்பூண்டியில் திருவாரூர் - மன்னார்குடி - முத்துப்பேட்டை சாலைகளை இணைக்கும் 2ம் கட்ட புறவழிச்சாலை பணிக்கு ரூ.11.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது 

இதுகுறித்து திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் மாரிமுத்து M.L.A வெளியிட்டுள்ள அறிக்கையில் 

திருத்துறைப்பூண்டியில் திருவாரூர்- மன்னார்குடி -முத்துப்பேட்டை சாலைகளை இணைக்கும் 2ம் கட்ட புறவழிச்சாலை பணிகளை தொடங்கிட வேண்டும் என்ற 
கோரிக்கையை ஏற்று 25/06/24 அன்று நடைபெற்ற பேரவை கூட்ட தொடரில் திருத்துறைப்பூண்டியில்  11.60 கி.மீ தொலைவு கொண்ட  இரண்டாம் கட்ட புறவழிச்சாலைக்கு நிலம் கைகப்படுத்த ரூ 11.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது. மேலும்  வேளுர் தீவாம்பாள்புரம், கொத்தமங்கலம், நுணாக்காடு, எழிலூர், வங்கநகர், மற்றும் கள்ளிக்குடி ஆகிய ஏழு கிராமங்களில் புறவழிச்சாலைக்கு தேவையான நிலங்களை உத்தேச திட்டமதிப்பீட்டு அறிக்கையின் படி கையகபடுத்தும் பணிகள் தொடங்கிட உள்ளது.

இந்த இரண்டாம் கட்ட புறவழிச்சாலை நிதி ஒதுக்கீடு அறிவிப்புக்கு  தமிழ்நாடு அரசுக்கு தொகுதி மக்களின் சார்பில் நன்றி தெரிவித்து மகிழ்கிறேன்

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments