கோபாலப்பட்டிணத்தில் நாட்டாணி புரசக்குடி ஊராட்சியின் சிறப்பு கிராம சபை கூட்டம்






கோபாலப்பட்டிணத்தில் நாட்டாணி புரசக்குடி ஊராட்சியின் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெறுகிறது 

இது குறித்து புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா I.A.S வெளியிட்டுள்ள அறிக்கையில் 

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 497 ஊராட்சிகளிலும் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 11 மணிக்கு சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது.

இக்கூட்டத்தில் `கலைஞரின் கனவு இல்லம்' திட்டம் 2024-25-ம் ஆண்டின் கீழ் கிராம ஊராட்சி அளவிலான குழுவினரால் தேர்வு செய்யப்பட்டுள்ள பயனாளிகளின் பெயர் பட்டியலுக்கு சிறப்பு கிராம சபையில் இடம் பெற ஒப்புதல் அளித்தல், ஊரக குடியிருப்புகள் பழுது பார்க்கும் திட்டம் 2024-25-ம் ஆண்டின் கீழ் கிராம ஊராட்சி அளவிலான குழுவினரால் தேர்வு செய்யப்பட்டுள்ள பயனாளிகளின் பெயர் பட்டியலுக்கு சிறப்பு கிராம சபையில் இடம் பெற செய்து ஒப்புதல் அளித்தல், 15-வது நிதிக்குழு மானியம் 2024-25-க்கான தேர்வு செய்யப்பட்ட பணிகளுக்கு கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றுதல் மற்றும் இதர பொருட்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

பொதுமக்கள்

மேற்குறிப்பிட்டுள்ள அரசின் திட்டங்கள் மற்றும் ஊராட்சியின் செயல்பாடுகள் பற்றிய விவரங்களை தெரிந்து கொண்டு பயன்பெறும் வகையில் பொதுமக்கள், மகளிர் சுய உதவிக் குழுக்களை சார்ந்தவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் என அனைவரும் சிறப்பு கிராம சபை கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும்.

அதன் ஒரு பகுதியாக   புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ள  சிறப்பு கிராம சபை கூட்டம் புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் ஊராட்சி ஒன்றியம் நாட்டாணி புரசக்குடி ஊராட்சியின் சிறப்பு  கிராம சபைக் கூட்டம் 28.06.2024 காலை 11.00 மணியளவில் கோபாலப்பட்டினம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில்  கட்டிடம் ஊராட்சி மன்ற தலைவர் ரா.சீதாலெட்சுமி பஷீர்அகமது MSc,BEd., தலைமையிலும்,  நடைபெறவுள்ளது. 

கூட்டத்தில் ஒன்றிய அலுவலர்களும், ஊராட்சி உறுப்பினர்களும் கலந்து கொள்ள உள்ளனர். 

இதில் அரசு அதிகாரிகள் பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொள்வார்கள்

பொதுமக்கள் இளைஞர்கள் முதியவர்கள் கிராம முக்கியஸ்தர்கள் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்...
 
நாட்டானி புரசக்குடி ஊராட்சி மன்ற உறுப்பினர்கள்

ரா.சீதாலெட்சுமி MSc,BEd.,
ஊராட்சி மன்ற தலைவர்,

உதயம் அபுதாஹீர், 
ஊராட்சி மன்ற துணைத்தலைவர்

வார்டு உறுப்பினர்கள்:

EM.சித்தி நிஜாமியா,
A.அபுதாஹீர்,
A.மும்தாஜ்பேகம், 
R.ரஜபுநிஜா,
S.பெனாசீர் பேகம் 
A. சாதிக் பாட்ஷா,
M. அன்வர் பாட்ஷா, 
R. மல்லிகா, 
G.சிங்காரி, 
S.லெத்திப், 
S.பிரேமா

நாட்டாணி புரசக்குடி ஊராட்சி கீழ் உள்ள ஊர்கள்:

1.கோபாலப்பட்டிணம் 
2.கணபதிப்பட்டிணம் 
3.குறிச்சிவயல்
4.முத்துக்குடா (மீனவர்) 
5.நாட்டாணி
6.ஆர்.புதுப்பட்டினம் (மீனவர்) 
7.ஆர்.புதுப்பட்டினம் (முஸ்லீம்) 
8.முத்துக்குடா (முஸ்லீம்) 
9.அண்டியப்பன்காடு 
10.கூடலூர் 
11. பாதரக்குடி 
12. புரசக்குடி

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments