பட்டா மாறுதலுக்கு ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் மற்றும் கிராம உதவியாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
ரூ.20 ஆயிரம் லஞ்சம்
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா என்.மங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜன் (வயது 49). டெய்லர் . இவர் ஓரியூர் குரூப்பில் உள்ள இவருக்கு சொந்தமான இரண்டு நிலத்திற்கு பட்டா மாறுதல் செய்து தரக்கோரி ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துள்ளார்.
இது தொடர்பாக ஓரியூர் குரூப் கிராம நிர்வாக அலுவலர் மாதவன், கிராம உதவியாளர் காளீஸ்வரன் ஆகியோரிடம் பட்டா மாறுதல் தொடர்பாக பேசியுள்ளார். அப்போது அவர்கள் பட்டா மாறுதல் செய்து தருவதற்கு ரூ.20 ஆயிரம் லஞ்சமாக கேட்டார்களாம்.
லஞ்சம் கொடுக்க விரும்பாத நாகராஜன், ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் செய்தார்.
அதன் அடிப்படையில் அவர்களது ஆலோசனையின் படி நாகராஜனிடம் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுக்களை போலீசார் கொடுத்து அனுப்பினர். அதை நாகராஜன் வெள்ளையபுரத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலர் தங்கி உள்ள அறை–யில் கொண்டு போய் கொடுத்துள்ளார்
பணியிடை நீக்கம்
அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் கிராம உதவியாளர் ஆகிய இருவரையும் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
அதனைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு துறை போலீசாரின் அறிக்கையின் அடிப்படையில் ஓரியூர் கிராம நிர்வாக அலுவலர் மாதவனை ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் ராஜ மனோகரனும், கிராம உதவியாளர் காளீஸ்வரனை திருவாடானை தாசில்தார் கார்த்திகேயனும் தற்காலிக பணி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளனர். பணியிடை நீக்கம் செய்த உத்தரவை வருவாய் துறையினர் கிராம நிர்வாக அலுவலர் மாதவன், கிராம உதவியாளர் காளீஸ்வரன் ஆகியோரிடம் வழங்கினர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.