அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு




அறந்தாங்கி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 2024-25-ம் ஆண்டுக்கான முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடைபெற்றது. இதற்கு கல்லூரி முதல்வர் (பொறுப்பு) குமார் தலைமை தாங்கினார். டிப்ளமோ சிவில் என்ஜினீயரிங், டிப்ளமோ மெக்கானிக்கல் என்ஜினீயரிங், டிப்ளமோ எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன் என்ஜினீயரிங், டிப்ளமோ கம்ப்யூட்டர் என்ஜினீயரிங், டிப்ளமோ கமர்சியல் பிராக்டிகல் என்ஜினீயரிங் ஆகிய பாடப்பிரிவுகளுக்கு மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடைபெற்றது. கலந்தாய்வில் தேர்வு பெற்ற மாணவர்களுக்கு கல்லூரி முதல்வர் சேர்க்கைக்கான ஆணையை வழங்கினார். கலந்தாய்வில் அனைத்து துறை பேராசிரியர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments