ஆவுடையார்கோவில் அருகே மாட்டு வண்டி எல்கை பந்தயம் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு




ஆவுடையார்கோவில் அருகே மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

மாட்டு வண்டி பந்தயம்

ஆவுடையார்கோவில் அருகே ஆவுடையார்கோவில்-அறந்தாங்கி சாலையில் மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. பந்தயத்தில் புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தஞ்சாவூர் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. இதில் பெரிய மாடு, நடுமாடு, சின்னமாடு என 3 பிரிவாக பந்தயம் நடைபெற்றது. பெரிய மாடு பிரிவில் 7 மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. அதில் பெரியமாடு போக வர 8 மைல் தூரமும் நிர்ணயிக்கப்பட்டது. நடுமாட்டில் 7 மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. அதில் நடுமாடு போக வர 7 மைல் தூரம் நிர்ணயிக்கப்பட்டது. சின்ன மாட்டில் 17 மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. சின்ன மாடு போக வர 5 மைல் தூரம் நிர்ணயிக்கப்பட்டது.

பரிசு

மாட்டு வண்டிகள் எல்கையை ேநாக்கி சீறிப்பாய்ந்து சென்றன. அப்போது பொதுமக்கள் கைத்தட்டி, விசில் அடித்து சாரதிகளை உற்சாகப்படுத்தினர். 3 பிரிவுகளில் முதல் 4 இடங்களை பிடித்தவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. முதல் இடம் பிடித்தவர்களுக்கு வெள்ளி தார் கம்பு, கேடயம், வெள்ளிநாணயம் பரிசாக வழங்கப்பட்டது. பந்தயத்தை புதுக்கோட்டை, தஞ்சாவூர், ஆவுடையார்கோவில், அறந்தாங்கி உள்ளிட்ட பல்ேவறு பகுதிகளில் இருந்து திரளானவர்கள் கலந்து கொண்டு கண்டு களித்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments