ஆவுடையார்கோவில் அருகே மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
மாட்டு வண்டி பந்தயம்
ஆவுடையார்கோவில் அருகே ஆவுடையார்கோவில்-அறந்தாங்கி சாலையில் மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. பந்தயத்தில் புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தஞ்சாவூர் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. இதில் பெரிய மாடு, நடுமாடு, சின்னமாடு என 3 பிரிவாக பந்தயம் நடைபெற்றது. பெரிய மாடு பிரிவில் 7 மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. அதில் பெரியமாடு போக வர 8 மைல் தூரமும் நிர்ணயிக்கப்பட்டது. நடுமாட்டில் 7 மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. அதில் நடுமாடு போக வர 7 மைல் தூரம் நிர்ணயிக்கப்பட்டது. சின்ன மாட்டில் 17 மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. சின்ன மாடு போக வர 5 மைல் தூரம் நிர்ணயிக்கப்பட்டது.
பரிசு
மாட்டு வண்டிகள் எல்கையை ேநாக்கி சீறிப்பாய்ந்து சென்றன. அப்போது பொதுமக்கள் கைத்தட்டி, விசில் அடித்து சாரதிகளை உற்சாகப்படுத்தினர். 3 பிரிவுகளில் முதல் 4 இடங்களை பிடித்தவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. முதல் இடம் பிடித்தவர்களுக்கு வெள்ளி தார் கம்பு, கேடயம், வெள்ளிநாணயம் பரிசாக வழங்கப்பட்டது. பந்தயத்தை புதுக்கோட்டை, தஞ்சாவூர், ஆவுடையார்கோவில், அறந்தாங்கி உள்ளிட்ட பல்ேவறு பகுதிகளில் இருந்து திரளானவர்கள் கலந்து கொண்டு கண்டு களித்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.