கந்தர்வகோட்டை அருகே தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட சிறுவன் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டு நகை, பணம் மீட்கப்பட்டது.
வழிப்பறி சம்பவம்
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகே சவுரியாம்பட்டி பிரிவு சாலை விராலிப்பட்டி பிரிவு சாலை, ஆதனக்கோட்டை அருகே வளவம்பட்டியில் இருசக்கர வாகனங்களில் சென்றவர்களிடம் கத்தியை காட்டி மிரட்டி 3 பேர் வழிப்பறியில் ஈடுபட்டனர். தொடர்ச்சியாக நடைபெற்ற இந்த 3 சம்பவங்களில் அவர்களிடம் இருந்து நகை, பணம், செல்போனை பறித்துவிட்டு மர்மநபர்கள் தப்பியோடினர். இது தொடா்பாக கந்தர்வகோட்டை, ஆதனக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே உத்தரவின்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு வழிப்பறியில் ஈடுபட்ட நபர்களை தேடி வந்தனர்.
3 பேர் கைது
இந்த நிலையில் இவ்வழக்குகளில் தேடப்பட்டு வந்த தஞ்சாவூர் மாவட்டம், மேலக்களக்குடி அருகே கடுக்காவலை சேர்ந்த செல்வம் (வயது 24), தஞ்சாவூரை சேர்ந்த 17 வயது சிறுவன், கீழ்பாதியை சேர்ந்த அறிவழகன் என்ற குட்டார் (20) ஆகிய 3 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
மேலும் அவர்களிடம் இருந்து 6 பவுன் தங்கச்சங்கிலி, மோதிரம், ரூ.10 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். சம்பவம் நடந்த 24 மணி நேரத்திற்குள் திருடர்களை கைது செய்த தனிப்படை போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே பாராட்டினார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.