புதுக்கோட்டைஅருகே 1,200 ஏக்கர் கொண்ட கவிநாடு கண்மாயில், மாவட்ட நிர்வாகம் மற்றும் கடைமடை பகுதி ஒருங்கிணைந்த விவசாயிகள் சங்கம் (கைபா) இணைந்து, தூர்வாரும் பணி மற்றும் சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணி நேற்று தொடங்கியது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் மெர்சி ரம்யா தலைமை தாங்கினார். அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் ஆகியோர் பணியை கொடியசைத்து தொடங்கி வைத்தனர். அதன்பின் பொக்லைன் எந்திரம் மூலம் பணிகள் நடைபெற்றது. கருவேலமரங்கள் அகற்றப்பட்டு, குறுங்காடு அமைக்கப்படுகிறது. மேலும் கண்மாயில் புதிதாக வேம்பு, புங்கை, கொடுக்காபுளி, மருது, ஆலமரம், பனைமரம், மா, பலா, பூவரசு போன்ற மரக்கன்றுகளை ஏரியின் வெளிப்பகுதியில் 50 மீட்டர் இடைவெளியில் நடவு செய்யப்பட உள்ளது. அமைச்சர் ரகுபதி நிருபர்களிடம் கூறுகையில், "காவிரி-வைகை-குண்டாறு கால்வாய் இணைப்பு திட்டத்தில் நிலங்கள் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. காடுகள் பரப்பளவை அதிகரிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்'' என்றார். இந்நிகழ்ச்சியில் அப்துல்லா எம்.பி., முன்னாள் அரசு வழக்கறிஞர் செல்லபாண்டியன், மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு) ரம்யாதேவி, நகர்மன்ற தலைவர் திலகவதி செந்தில், கைபா திட்ட இயக்குனர் அசோக் ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.