தமிழ்நாடு ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்கத்தின் சிவகங்கை மாவட்ட மாநாடு மாவட்ட தலைவர் திரவியம் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட துணைத்தலைவர் வீரபாண்டியன் வரவேற்றார். முன்னாள் மாநில செயலாளர் ராபர்ட் மாநாட்டை தொடங்கி வைத்து பேசினார். மாவட்ட செயலாளர் முகமது ரபீக் அறிக்கையையும், மாவட்ட பொருளாளர் ஹக்கிம் வரவு-செலவு அறிக்கையையும் வாசித்தனர்.
மாவட்ட நிர்வாகிகள் தனுஷ்கோடி, முகமது அப்துல் ரஹீம், சங்கர சுப்பிரமணியன், ஜேசு மணி, சேது, அர்ச்சுனன், வாழ வந்தான், அருள்சாமி, முத்துமாடன், மகேஸ்வரன், ரமேஷ், மணி உள்பட பலர் மாநாட்டில் பேசினா். மாநில செயலாளர் முத்துராமலிங்கம் நிறைவுரை ஆற்றினார்.
மாநாட்டில், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், சத்துணவு அங்கன்வாடி ஊழியருக்கு ரூ.9 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும். 70 வயதானவருக்கு 10 சதவீதம் ஓய்வூதியத்தை உயர்த்த வேண்டும். மருத்துவ காப்பீடு திட்டத்தில் 100 சதவீத செலவு தொகையை வழங்க வேண்டும். மதுரை- தொண்டி இடையே ரெயில் பாதை அமைக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் மாவட்ட துணைத்தலைவர் அப்துல் அஜீஸ் நன்றி கூறினார். முன்னதாக நடைபெற்ற மாவட்ட நிர்வாகிகள் தேர்வில் மாவட்ட செயலாளராக சங்கரசுப்பிரமணியன் தேர்வு செய்யப்பட்டார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.