ஆற்றுக்கால்வாய் கடல் பகுதி
ராமநாதபுரம் மாவட்டத்தில் மீன்பிடி தொழில் பிரதானமாக விளங்கி வருகிறது. அதேபோல் தமிழகத்திலேயே அதிகமான மீனவர்களை கொண்ட பகுதியாகவும் இது திகழ்கிறது. இந்த மாவட்ட மீனவர்கள் மீன்பிடிப்பதில் பல முறைகளை பின்பற்றி வருகின்றனர். நாட்டுப்படகு, பைபர் படகு, சிறிய வத்தை, தெர்மாகோலால் செய்யப்பட்ட மிதவை, தூண்டில் நரம்பு, தூண்டில் வலைவீச்சு வலை உள்ளிட்டவற்றின் மூலமாகவும் மீனவர்கள் மீன் பிடித்து வருகின்றனர். இதனிடையே உப்பூர், திருப்பாலைக்குடிக்கு இடைப்பட்ட மாங்குரோவ் காடுகள் (அலையாத்தி காடு ) உள்ள ஆற்றுகால்வாய் கடல் பகுதியில் இயற்கையாகவே இறால், நண்டு உள்ளிட்ட பல வகையான மீன்கள் உள்ளன. இங்குள்ள மீனவர்கள் கடல் பகுதியில் இறங்கி இறால், நண்டு உள்ளிட்ட பல வகை மீன்களை கைகளால் பிடித்து வருகின்றனர்.
அதிகம் ருசி கொண்டவை
இதுகுறித்து திருப்பாலைக்குடியை சேர்ந்த மீனவர் ஒருவர் கூறும்போது, திருப்பாலைக்குடி, உப்பூர் இடைப்பட்ட பகுதியில் இயற்கையாகவே மாங்குரோவ் காடுகள் அதிகளவில் வளர்ந்துள்ளன. மாங்குரோவ் காடுகள் உள்ள பகுதியில் இறால், நண்டு உள்ளிட்ட மீன்கள் அதிகம்.
ஆற்றுக்கால்வாய் கடல் பகுதியில் நீரோட்டம் குறைவாக இருக்கும்போது கடலுக்குள் இறங்கி நீந்தி வரும் இறால், நண்டு, ஓரா உள்ளிட்ட மீன்களை கைகளால் பிடிப்போம். அவற்றை வீட்டுக்கு கொண்டு வந்து சமைத்து சாப்பிடுவோம். படகுகளில் பிடித்து வரும் இறால், நண்டு மீன்களை விட மாங்குரோவ் காடுகள் உள்ள ஆற்றுக்கால்வாய் கடல் பகுதியில் பிடிக்கப்படும் இந்த வகை மீன்கள் அதிக ருசியாக இருக்கும் என கூறினார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.