கிருஷ்ணாஜிப்பட்டிணத்தில் SDPI கட்சியின் துவக்க தினத்தை முன்னிட்டு புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் சார்பில் கொடியேற்றம் & மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி






ஜுன் 21, SDPI கட்சியின் 16வது ஆண்டு துவக்க தினத்தை முன்னிட்டு புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் சார்பாக மாவட்ட அலுவலகத்தில் கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது.

மாவட்ட தலைவர் U.செய்யது அகமது தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினரும் தஞ்சை மண்டல தலைவருமான தப்ரே ஆலம் பாதுஷா அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு கட்சி கொடியை ஏற்றிவைத்தார்.

தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியை மாவட்ட பொருளாளர் M.முகமது அஜீஸ் அவர்கள் வரவேற்புரை ஆற்றி தொடங்கி வைக்க சிறப்பு அழைப்பாளர் தப்ரே ஆலம் பாதுஷா அவர்கள் வாழ்த்துரை  வழங்கினார். மேலும் மாவட்ட, தொகுதி, நகர நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். இறுதியாக அறந்தாங்கி வடக்கு தொகுதி தலைவர் சேக் இஸ்மாயில் அவர்கள் நன்றியுரை ஆற்றி நிறைவு செய்தார். 

நிகழ்ச்சியை தொடர்ந்து பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

வெளியீடு,
சமூக ஊடக அணி
SDPI கட்சி
புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம்

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments