அறந்தாங்கியில் அரசு பஸ் மோதி பெண் மரணம்




அறந்தாங்கியில் அரசு பஸ் மோதி பெண் பரிதாபமாக இறந்தார்.

பஸ் மோதி விபத்து

அறந்தாங்கி அருகே நாகுடி களக்குடி பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 43). இவர் நாகுடி கடைவீதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி ஜெயலட்சுமி (40). இவர்களுக்கு தர்ஷினி (14) என்ற மகளும், சவரிவாஸ் (9) என்ற மகனும் உள்ளனர்.

இந்தநிலையில் சக்திவேல் தனது மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் அறந்தாங்கிக்கு சென்று கொண்டு இருந்தார். அறந்தாங்கி டவுன் பெரிய கடைவீதி அருகே பழைய லாரி மார்க்கெட் அருகே சென்றபோது அந்த வழியாக சென்ற அரசு பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

பெண் பலி

இந்த விபத்தில் கீழே விழுந்த ஜெயலட்சுமி மீது பஸ்சின் சக்கரம் ஏறி இறங்கியது. இதில் சம்பவ இடத்திலேயே ஜெயலட்சுமி பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த அறந்தாங்கி இன்ஸ்பெக்டர் கருணாகரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஜெயலட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், விபத்தை ஏற்படுத்திய அரசு பஸ் டிரைவர் மூக்கையாவை போலீசார் கைது செய்தனர்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments