ஆவுடையார்கோவில் அருகே வாட்டாத்தூர் கிராமத்தில் பண்ணை குட்டையில் மீன் வளர்ப்பு குறித்து மாவட்ட அளவிலான விவசாயிகளுக்கு பயிற்சி நடைபெற்றது. பயிற்சிக்கு உதவி மீன் வள ஆய்வாளர் மோனிகா தலைமை தாங்கி பண்ணை குட்டையில் மீன் வளர்ப்பு முறைகளான கட்லா, ரோகு, மிர்கால், கெண்டை, கொடுவாய் ஆகிய மீன்களை வளர்க்கும் தொழில்நுட்பங்கள் மற்றும் மீன் வளத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள், அவற்றின் மானியங்கள் குறித்தும் எடுத்து கூறினார். ஆவுடையார்கோவில் வேளாண்மை உதவி இயக்குனர் (பொறுப்பு) சவீதா வேளாண்மை துறையின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள், நெல் வரப்பில் உளுந்து சாகுபடி தொழில்நுட்பங்கள், பசுந்தாள் பயிர் சாகுபடி செய்வதன் அவசியம் பற்றி எடுத்துக் கூறினார். உதவி வேளாண்மை அலுவலர் மணிமேகலை வேளாண்மை கிடங்கில் உள்ள இடுபொருட்கள் அவற்றின் மானியங்கள், திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் பற்றி எடுத்து கூறினார். முடிவில் வட்டார தொழில்நுட்ப மேலாளர் ஜகுபர் அலி நன்றி கூறினார். பயிற்சிக்கான ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் ராமநாதன், கீர்த்திகா ஆகியோர் செய்திருந்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.