ஆவுடையார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மின்னல் தாக்கி தென்னை மரம் தீப்பிடித்தது




ஆவுடையார்கோவில் பகுதியில் மின்னல் தாக்கி தென்னை மரம் தீப்பிடித்து எரிந்தது.

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தென்னை மரங்கள் உள்ளது. 

இந்நிலையில் நேற்று பெய்த மழையில் மின்னல் தாக்கியதில் தென்னை மரத்தில் தீப்பிடித்தது. இதைப்பார்த்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஆவுடையார்கோவில் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில், தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments