கோபாலப்பட்டிணம்-மீமிசல் பகுதியில் நீண்ட நாட்களுக்கு பிறகு மழை!




கோபாலப்பட்டிணம்-மீமிசல் பகுதியில்    கருமேகங்கள் சூழ்ந்தது மிதமான மழை பெய்தது.

தமிழகத்தில் ஜூலை 9 வரை ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புதுச்சேரி, காரைக்காலில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். சென்னையில் 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மன்னார் வளைகுடா, தென்தமிழகம் கடலோரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. தெற்கு, மத்திய, வடக்கு வங்கக்கடல், வடக்கு ஆந்திர கடலோர பகுதிகளில் 55 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா கோபாலப்பட்டிணம்-மீமிசல் பகுதியில் 03.07.2024 புதன்கிழமை இரவு 9 மணியளவில் இருந்து கருமேகங்கள் சூழ்ந்து வெப்பம் தணிந்து நீண்ட நாட்களுக்கு பிறகு மழை பெய்தது. இதனால் குளிர்ச்சியான சூழல் நிலவியது.

மழையால் ஒரு சில இடங்களில் தாழ்வான பகுதியில்   தண்ணீர் தேங்கியுள்ளது.

தற்போது பெய்த  மழையினால்  பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

கோபாலப்பட்டிணத்தில் காட்டுத்குளம், நெடுங்குளம் மக்கள் குளிப்பதற்கு பயன்படுத்தி வருகிறார்கள். நெடுங்குளத்தில்  குறைவான அளவில் தண்ணீர் உள்ளது. காட்டுக்குளத்தில் குளிப்பதற்கு ஓரளவு தண்ணீர் உள்ளது. ஆனால்  நெடுங்குளம்  எப்போது நிரம்பும் மக்கள் காத்து கொண்டு உள்ளார்கள்.








எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments