தெற்கு ரயில்வேயின் புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சென்னை எழும்பூர் - நாகர்கோவில் இடையே வாரத்துக்கு நான்கு முறை இயக்கப்படவுள்ளது.
பயணிகளின் வசதிக்காகவும், கூடுதல் கூட்டத்தை தவிரக்கவும் சென்னை எழும்பூர் - நாகர்கோவில் வந்தே பாரத் ரயில் வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய கிழமைகளில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இந்த சிறப்பு வந்தே பாரத் ரயில் 06067/06068 ஆகிய எண்களில் முறையே சென்னை எழும்பூர் - நாகர்கோவில்/ நாகர்கோவில் - சென்னை எழும்பூர் ஆகிய வழித்தடங்களில் இயக்கப்படுகிறது.
இந்த ரயில் சென்னையில் இருந்து காலை 5 மணிக்கு புறப்படுகிறது. நாகர்கோவிலுக்கு மதியம் 13.50 மணிக்கு சென்றடைகிறது. ஜூலை 11,12,13,14,18, 19,20,21 ஆகிய தேதிகளில் மொத்தம் 8 சேவைகள் இந்த ரயில் இயக்கப்படவுள்ளது.
அதேபோல் மறுமார்க்கமாக நாகர்கோவிலில் இருந்து மதியம்14.20 மணிக்கு புறப்படுகிறது. சென்னைக்கு இரவு 23.00 மணிக்கு வந்தடைகிறது. ஜூலை 11,12,13,14,18, 19,20,21 மொத்த 8 சேவைகள் இயக்கப்படவுள்ளது.
இந்த சிறப்பு வந்தே பாரத் ரயில் மொத்தம் 8 பெட்டிகளை கொண்டதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.