கட்டுமாவடியில் KM ஷிஹாபுத்தீன் ஆலிம் அறக்கட்டளை நடத்திய 10 & 12 வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவிகளை கௌரவிக்கும் பாராட்டு விழா அறக்கட்டளையின் அலுவலக திறப்பு விழா.




கட்டுமாவடியில் KM ஷிஹாபுத்தீன் ஆலிம் அறக்கட்டளை நடத்திய 10 & 12 வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவிகளை கௌரவிக்கும் பாராட்டு விழா அறக்கட்டளையின் அலுவலக திறப்பு விழா நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம் கட்டுமாவடி KM ஷிஹாபுத்தீன் ஆலிம் அறக்கட்டளையின் சார்பாக இரண்டாம் ஆண்டு 2023 - 2024 ஆம் ஆண்டில் கட்டுமாவடி அரசு மேல்நிலைப்பள்ளியில் பத்து மற்றும் பண்ணிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவிகளை கௌரவிக்கும் பாராட்டு விழா மற்றும் அறக்கட்டளையின் அலுவலக திறப்பு விழா நடைபெற்றது.

இவ்விழாவினை அறக்கட்டளையின் தலைவர் A.இஸ்கந்தர் அவர்கள் தலைமை தாங்கினார்.

இவ்விழா தேசியகீதத்தை அடுத்து ஜனாப். மலிக்குஜ்ஜமான் ஆலிம் அவர்கள் கிராஅத் ஓதி துவங்கி வைத்தார்.

மேலும் விழாவின் நிகழ்வில், சிறப்பு பேச்சாளர்களாக இஸ்மாயில், சாதிக், நைனா முஹம்மது மரைக்காயர், காந்தி சுப்ரமணியன், தௌலத் அலி ஆகியோர் மாணாக்கர்களை  உற்சாகபடுத்தி பேசினர்.

அதனைத்தொடர்ந்து, மாணவ மாணவிகளுக்கு ஊக்கத்தொகையுடன் பரிசுகள் வழங்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து, அறக்கட்டளை அலுவலகத்தை ஜனாப் பஷீர் அலி ஆலிம் அவர்கள் திறந்து வைத்தார்கள்.

அறக்கட்டளையின் பொருளாளர் இஸ்ஹாக் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள்.

இவ்விழாவில் கட்டுமாவடி ஜமாஅத்தார்கள், கிராம நிர்வாகிகள், ஊராட்சி பிரதிநிதிகள், ஊர் பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இறுதியில் அறக்கட்டளையின் செயலாளர் சைபுதீன் அவர்கள் நன்றியுரையாற்றினார். இவ்விழாவினை க.சண்முகவள்ளி அவர்கள் தொகுத்து வழங்கினார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments