புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கான விலையில்லா சைக்கிள் வினியோகிக்க உதிரி பாகங்கள் வந்திறங்கியுள்ளன.
விலையில்லா சைக்கிள்
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழக அரசின் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள், நோட்டுகள், உபகரணங்கள், புத்தக பைகள் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. அந்த வகையில் பிளஸ்-1 வகுப்பு மாணவ-மாணவிகளுக்கும் விலையில்லா சைக்கிள் வழங்கப்படுகிறது. இந்த கல்வியாண்டிற்கான வகுப்புகள் கடந்த மாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. விலையில்லா பாடப்புத்தகங்கள், நோட்டுகள், புத்தக பைகள் உள்ளிட்டவை பள்ளி திறந்த நாளிலே மாணவர்களுக்கு வழங்கப்பட்டு விட்டன. அடுத்ததாக விலையில்லா சைக்கிள் வினியோகிக்க ஏற்பாடு நடைபெற்று வருகிறது.
உதிரிபாகங்கள்
புதுக்கோட்டை மாவட்டத்தில் இத்திட்டத்தில் பயன்பெறும் மாணவ-மாணவிகளின் எண்ணிக்கை விவரம் பள்ளி வாரியாக கணக்கெடுக்கப்பட்டுள்ளது. அதற்கேற்ப விலையில்லா சைக்கிள் வழங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் விலையில்லா சைக்கிள்களுக்கான உதிரிபாகங்கள் பள்ளிகளுக்கு வந்திறங்க தொடங்கியுள்ளன. சைக்கிளுக்கான டயர்கள், வீல்கள் உள்ளிட்ட உதிரிபாகங்கள் பள்ளிகளுக்கு வருகிறது. அதனை பொருத்தி முழுமையாக சைக்கிளாக உருவாக்கி மாணவர்களுக்கு வினியோகிக்கப்பட உள்ளது. புதுக்கோட்டையில் பிரகதாம்பாள் அரசு மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா சைக்கிள்களுக்கான உதிரிபாகங்கள் வந்திறங்கின. அதனை பள்ளி வளாகத்தில் குவித்து வைக்கப்பட்டுள்ளன. விரைவில் இதனை பொருத்தும் பணி நடைபெற உள்ளது. அதன்பின் விலையில்லா சைக்கிள் மாணவர்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி நடைபெறும்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.