பாம்பன் ரயில் பாலம் கட்டப்பட்டு நூறு ஆண்டுகளை கடந்து விட்ட நிலையில் கடந்த 2019ம் ஆண்டு மார்ச் மாதம் ரயில்வே அமைச்சகம் பாம்பன் கடலில் பழைய பாலத்தின் அருகிலேயே புதிய ரயில் பாலத்தினை கட்டுவதற்கான பணிகளை துவங்கியது. புதிய பாம்பன் பாலத்திற்கான திட்டச் செலவு ரூ.535 கோடி. பாலத்தின் நீளம் 2,070 மீட்டர் (6,790 அடி) ஆகும். 101 தூண்களை கொண்டது. கடல் மட்டத்திலிருந்து 6 மீட்டர் உயரத்தில் புதியப் பாலம் எழுப்பப்படுகிறது.
இந்த பாலத்தில் 90 சதவிகிதப் பணிகள் நிறைவடைந்துவிட்டன. சில தூண்களில் மட்டும் இணைப்பு கர்டர்களும் அதன் மேல் தண்டவாளமும் அமைக்கப்பட வேண்டும். பாலத்தின் மையப்பகுதியில் கப்பல்கள் செல்ல பாம்பன் சாலைப்பாலத்துக்கு இணையான 27 மீட்டர் உயரத்திற்கு ஹைட்ராலிக் லிஃட் மூலம் இயங்கக் கூடிய செங்குத்து தூக்கு பாலம் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் பாம்பனில் புதிய ரயில் பாலத்தில் ஒரு என்ஜினில் 05 சரக்கு பெட்டிகளை இணைத்து சோதனை நடைபெற்றது. இந்த சோதனைக்காக புதிய ரயில் பாலத்தின் தூண்களில் சென்சார் கருவிகள் பொறுத்தப்பட்டு ரயில்வே தண்டவாளங்கள் முறையாக வரிசைப்படுத்தப்பட்டுள்ளதா, பாலத்தின் தாங்கும் திறன், அதிர்வுகள் குறித்து கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி மையத்தின் (சி. எஸ். ஐ. ஆர்.) விஞ்ஞானி பி.அருண்சுந்தரம் தலைமைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர்.
இன்னும் இரண்டு மாதத்தில் புதிய பாலத்தின் பணிகள் முற்றிலும் நிறைவடைந்து முழுமையான ரயில் என்ஜின் பெட்டிகளுடன் சோதனை ஓட்டம் நடைபெறும், என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.