நெல்லையில் இருந்து மேற்கு வங்க மாநிலம் ஹவுரா அருகே உள்ள ஷாலிமாருக்கு சிறப்பு ரெயில் இரு மார்க்கத்தில் இயக்கப்படுவதாக ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த ரெயில் புதுக்கோட்டை வழியாக இயக்கப்பட உள்ளது. நெல்லையில் இருந்து நாளை மறுநாள் (வியாழக்கிழமை) மற்றும் 25-ந் தேதி ரெயில் (வண்டி எண் 06087) அதிகாலை 1.50 மணி அளவில் புறப்படும். அன்றைய தினம் புதுக்கோட்டைக்கு அதிகாலை 6.38 மணிக்கு வந்து 6.40 மணிக்கு புறப்படும். இதேபோல மறுமார்க்கத்தில் ஷாலிமாரில் இருந்து ரெயில் (வண்டி எண் 06088) வருகிற 20-ந் தேதி மற்றும் 27-ந் தேதிகளில் நெல்லைக்கு புறப்படுகிறது. இந்த ரெயில் புதுக்கோட்டைக்கு ஞாயிற்றுக்கிழமை அதாவது 21, 28-ந் தேதிகளில் அதிகாலை 6.28 மணிக்கு வந்து 6.30 மணிக்கு புறப்படும். இந்த ரெயில் நெல்லையில் இருந்து புறப்பட்டு வருகிற வழியில் புதுக்கோட்டையிலும் நின்று செல்வதால் புதுக்கோட்டை பயணிகள் இந்த ரெயிலை பயன்படுத்தி கொள்ள முடியும். திருச்சி, விருத்தாசலம், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், காட்பாடி உள்ளிட்ட இடங்களில் நின்று செல்கிறது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.