புதுக்கோட்டை மாவட்டத்தில் திருட்டுப்போன 171 செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு



புதுக்கோட்டை மாவட்டத்தில் திருட்டுப்போன, தொலைந்து போன செல்போன்கள் தொடர்பாக போலீஸ் நிலையங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளில் உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் புதுக்கோட்டை மாவட்ட சைபர் கிரைம் பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இதில் கடந்த 2 மாதங்களில் காணாமல் போன 171 செல்போன்கள் மீட்கப்பட்டன. இதன் மதிப்பு ரூ.25 லட்சத்து 65 ஆயிரம் ஆகும். மீட்கப்பட்ட செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. 

இதில் உரியவர்களிடம் செல்போன்களை போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே ஒப்படைத்தார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த ஆண்டுகளில் 283 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு உரிய நபர்களிடம் ஒப்படைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

செல்போன்களை மீட்க சிறப்பாக பணிபுரிந்த போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே பாராட்டினார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments