மணமேல்குடி பஸ் ஸ்டாண்டு மருந்து கழிவு குப்பை மேடாக காட்சி அளிக்கிறது. அதில் கால்நடை செத்து துர்நாற்றம் வீசுவதால் தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே விரைந்து அப்புறபடுத்த வேண்டும் என தமிழர் தேசம் கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி பஸ் ஸ்டாண்டில் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் அனைத்து குப்பைகளையும் கொண்டு வந்து கொட்டுகின்றனர். கோழி இறைச்சி, மருந்து கழிவு உள்ளிட்ட அனைத்து குப்பைகளையும் பஸ் ஸ்டாண்டில் கொட்டுவதால் இந்த கழிவுகளை நாய், மாடு உள்ளிட்ட கால்நடைகள் தின்று வருகிறது. அவ்வப்போது சம்மந்தப்பட்ட துறையினர் குப்பைகளை அள்ளி செல்கின்றனர். குப்பை கொட்டுவதற்கு என்று தனி இடம் அமைத்து கொடுக்க எந்த நடவடிக்கையும் இல்லாததால் இங்கு அனைத்து குப்பைகளும் கொட்டப்பட்டு குப்பை மேடாக உள்ளது.
இந்த மருந்து கழிவு, இறைச்சி கழிவுகளை சாப்பிடும் கால்நடைகள் செத்து கிடக்கிறது. இதனால் பஸ் ஸ்டாண்டு பகுதியில் துர்நாற்றம் வீசி வருகிறது. மேலும் தொற்று நோய் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. எனவே மணமேல்குடி பஸ் ஸ்டாண்டில் செத்து கிடக்கும் மாடு, கொட்டப்பட்டு உள்ள அனைத்து குப்பைகளையும் உடனே அப்புறபடுத்தி. இனிவரும் நாட்களில் யாரும் பஸ் ஸ்டாண்டில் இறைச்சி கழிவு, மருந்து கழிவுகளை கொட்டாமல் இருக்க நிரந்தர தீர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழர் தேசம் கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.