ஆவுடையார்கோவில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறை திறப்பு




ஆவுடையார்கோவில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறை திறப்பு விழா நடைபெற்றது.

விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் சுகுமாரி தலைமை தாங்கினார். இதையடுத்து முன்னாள் மாணவர் கே.சிதம்பரம் நினைவாக அவரது மகன் துரைமுருகன் நுன் திறன் வகுப்பறைக்கு ரூ.2 லட்சத்தை வழங்கினார். இதனை வட்டாரக் கல்வி அலுவலர்கள் புவனேஸ்வரி மலர்விழி, நரசிம்மன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். நிகழ்ச்சியில் ஒன்றியக்குழு உறுப்பினர் கருப்பூர் செந்தில்குமரன், ஊராட்சி மன்ற தலைவர் சந்திரா ராஜமாணிக்கம், ஜவுளி ஸ்டோர் உரிமையாளர் நடராஜன், வர்த்தக சங்க தலைவர் செபாஸ்டின், பள்ளி பெற்றோர் சங்க தலைவர் அருமைநாதன், பள்ளி மேலாண்மை குழு தலைவர் சிவகாமி, கல்வியாளர் கணேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments